search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mechanic"

    • சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் அருகே உள்ள சிறுதலை காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 30).

    இவர் வேதாரண்யத்தில் உள்ள தனியார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சம்பவதன்று கடையில் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சிறுதலை காடுக்கு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆதனூர் மானங்கொண்டனாரு பாலம் தூண்டிக்காரன் கோவில் அருகே சென்றபோது இவர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் வேதாரண்யம் போலீஸ் சரக டி.எஸ்.பி. சுபாஷ் சந்திர போஸ் ஏற்பாட்டில் தனிப்படை போலீசாரம், வேதாரணிய போலீசாரும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • சமயநல்லூர் அருகே மெக்கானிக் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் வி.எம்.டி.நகர் வைகை ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் (வயது47). கார் பழுதுபார்க்கும் மெக்கானிக் செட் வைத்துள்ளார். நேற்று மாலை இவர் வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இரவில் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் கதவு பூட்டும், மரக்கதவும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த லாக்கரில் 4¼பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்கின்றனர்.

    • தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    திருவாரூர் மாவட்டம் கோவில்பத்து என்ற பகுதியை சேர்ந்த பரணி (வயது 20) என்பவர் வெள்ளகோவில் பகுதியில் தங்கி ஓயி எந்திரம் மெக்கா னிக்காக வேலை செய்து வந்தார். நேற்று இரவு கோவை -திருச்சி ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள சொரியங்கிண த்துப்பாளையம் பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்ற போது பரமத்தி யிலிருந்து திருப்பூரை நோக்கி வந்த டிப்பர் லாரி பரணி மீது மோதியது, இதனால் பலத்த அடிபட்ட பரணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    இந்த விபத்து குறித்து வெள்ள கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெ க்டர் கே. ராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
    • இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார்

    ஈரோடு:

    மொடக்குறிச்சி அடுத்துள்ள பூமாண்டம் வலசு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தாமோதரன் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்நிலையில் குடிப்பழ க்கத்திற்கு அடிமையான தாமோதரன் தினமும் குடித்து வந்ததால் வயிறு, தொண்டை ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குண மடைந்தார்.

    இதனையடுத்து சம்பவத்தன்று திடீரென்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாமோதரன் இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல் பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பனங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல் பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது 27). இவர் விசைத்தறி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் இன்று காலை சிவதாபுரம் அருகே உள்ள பனங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
    • நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் பிணமாக கிடந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்த செங்கோட்டையன்.

    இருசக்கர வாகனம் மெக்கானிக்கான இவருக்கு திருமணம் ஆகி அம்பிகா என்று மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நாட்டமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் இன்று காலை செங்கோட்டையன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் போலீசார் செங்கோட்டையனின் உடலை மீட்டு, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செங்கோட்டையன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் எலி மருந்து சாப்பிட்ட மெக்கானிக் பாலியானர்.
    • இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 54). ஜேசிபி மெக்கானிக்கான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட குமார், மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் கணேசன்.
    • இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்

    பணகுடி:

    ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.நேற்று இரவு இவரது கடையின் அருகே உள்ள சாலையில் ஒரு பணப்பை கிடந்தது.

    அதை பார்த்த கணேசன் பணத்தை எடுத்து கொண்டு ராதாபுரம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகத்திடம் அந்த பையை வழங்கினார். அதை பெற்று கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், மெக்கானிக்கின் நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    • தூத்துக்குடி முள்ளக்காடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காசிராம் ( வயது 31).
    • துறைமுகம் சாலை வ.உ.சி. சிலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காசிராம் ( வயது 31). தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை பணி முடிந்து கார்த்திக் வீடு திரும்பி கொண்டிருந்தார். துறைமுகம் சாலை வ.உ.சி. சிலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திக் உயிரிழந்தார்

    இது குறித்து தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த செய்யது அலி ( 22) என்பவரை கைது செய்தார்.

    • மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திக்குளம் சாவடி தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 18). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் கார் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜ பாளையம் வந்த ஈஸ்வரன் திடீரென விஷம் குடித்து விட்டு பஸ்சில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றுள்ளார். இதுபற்றி அவர் தன்னுடன் வேலை பார்க்கும் சார்லஸ் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து ஈஸ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து ஈஸ்வரனின் பெற்றோர் மகனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன் பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஈஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரனின் தாய் தங்கம்மாள் புகார் ெசய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • தனியார் திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி மதுரையை சேர்ந்த மெக்கானிக் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் பொன்விழா மைதானம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கு ஏ.சி. பொருத்து வதற்கான பணிகள் நடைபெற்றது.

    மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஷாருத் (வயது 24) என்பவர் இன்று காலை ஏ.சி. பொருத்துவதற்கான பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் ஏறி நின்ற ஏணி நிலைத்தடுமாறியதால் மின் கம்பி மீது அவரது கைகள் பட்டதால் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமங்கலம் அருகே ஆட்டோ மரத்தில் மோதியதில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.
    திருமங்கலம் 

    திருமங்கலம் அருகே உள்ள அனுப்பப்பட்டியை சேர்ந்தவர் படித்துரை(44). இவருடைய மனைவி தேடா செல்வி. இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    படித்துரை அனுப்பபட்டியில் டிங்கரிங் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று மாலை இவரது கடைக்கு டிங்கரிங் பணிக்கு வந்த ஆட்டோவை எடுத்து கொண்டு செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் சென்றார்.

    அனுப்பப்பட்டி அருகே வரும்போது பிரேக் பிடிக்காததால் சாலையோர புளியமரத்தில் ஆட்டோ மோதியது.

    இதில் படுகாயமடைந்த படித்துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். 

    இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×