என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
- கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
- மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லா நகர் காலனியை சேர்ந்தவர் முத்து ராஜ். இவருக்கு சொந்தமான 30 அடி ஆழம் உள்ள கிணற்றில் அவருடைய மாடு தவறி விழுந்து விட்டது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப் படைத்தனர். மாட்டின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு நிலைய மீட்பு குழு வினருக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story






