கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டிருந்த ஆடு தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது.
கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
Published on

கரூர்:

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், சங்கரம்பாளையத்தில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டிருந்த ஆடு ஒன்று தவறி 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது.

இது குறித்து கரூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு தீயணைப்பு படை வீரர் வந்தனர்.

சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி நீரில் உயிருக்கு போராடி தத்தளித்துக்கொண்டிருந்த ஆட்டினை லாவகமாக மீட்டனர். பின்னர் ஆட்டின் உரிமையாளரிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com