என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பார்வையாளர்"

    • தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டனர்.
    • மேற்கு வங்கத்திற்கு சுதீப் ராய் பர்மன் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    எதிர்வரும் சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி மற்றும் காஜி முகமது நிஜாமுதீன் ஆகிய 3 பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கேரளாவுக்கு சச்சின் பைலட், கே.ஜே. ஜார்ஜ், இம்ரான் பிரதாப்கார்ஹி மற்றும் கன்னையா குமார் ஆகிய 4 பேரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    மேற்கு வங்கத்திற்கு சுதீப் ராய் பர்மன் மற்றும் ஷகீல் அகமது கான் ஆகிய 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அசாம் மாநில தேர்தல் பார்வையாளர்களாக பூபேஷ் பாகல், டி.கே. சிவக்குமார் மற்றும் பந்து திர்கே ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அந்தந்த மாநிலங்களின் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவர்.   

    • ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
    • விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

     ராஜபாளையம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை செய்வதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

    ராஜபாளையம் நகர காங்கிரஸ் தலைவர் சங்கர்கணேஷ், கிழக்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், மேற்கு வட்டார தலைவர் கணேசன், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ராஜாலிங்கராஜா, பொன்.சக்திமோகன், சங்குத்துரை,ராஜ்மோகன், கவுன்சிலர்கள் சங்கர்கணேஷ், புஷ்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×