search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Observer"

    • ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.
    • விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

     ராஜபாளையம்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை செய்வதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் 200-க்கு மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மேற்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜு முன்னிலை வகித்தார்.

    ராஜபாளையம் நகர காங்கிரஸ் தலைவர் சங்கர்கணேஷ், கிழக்கு வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன், மேற்கு வட்டார தலைவர் கணேசன், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ராஜாலிங்கராஜா, பொன்.சக்திமோகன், சங்குத்துரை,ராஜ்மோகன், கவுன்சிலர்கள் சங்கர்கணேஷ், புஷ்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×