விளாத்திகுளம் அருகே அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற சிறப்பு முகாம்

ஆற்றாங்கரை கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றாங்கரை கிராமத்தில் 2021-2022 அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அரசின் சார்பில் கிராமத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கணவர் இல்லாத வயது முதிர்ந்த பெண்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரகுராமர், கால்நடை உதவி மருத்துவர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரசல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, மகளிர் திட்ட மேலாளர் அருள்செல்வி, வார்டு செயலாளர் லெனின், கிளை செயலாளர்கள் பிச்சை, சிங்கராஜ், கருப்பசாமி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com