என் மலர்
நீங்கள் தேடியது "makkal neethi maiam"
- சந்திரசேகர் இப்போது தி.மு.க. கூட்டணியில் சீட் கேட்டு நிற்பதை தி.மு.க.-வினரே விரும்பவில்லையாம்.
- தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பொங்கல் பரிசுக்கான மொத்த சப்ளையையும் சந்திரசேகரே கவனித்துக்கொண்டாராம்.
மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்-ஆக உள்ளபெயர் சந்திரசேகர். இவர் வேறு யாருமில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளராக இருந்தார். சில காலங்களாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்காக, மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் செலவுகளை மொத்தமாக, தான் பார்த்துக்கொள்வதாக கமலிடம் உறுதி அளித்துள்ள சந்திரசேகர், தற்போது கமலின் நிழலாகவே மாறிப்போயிருக்கிறார் என்கிறது அரசியல் வட்டாரம்.
யார் இந்த சந்திரசேகர்?
அனிதா டெக்ஸ் காட் என்ற திருப்பூரை மையமாக கொண்ட நிறுவனத்தின் அதிபர்தான் இந்த சந்திரசேகர். தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு இவரது நிறுவனத்தில் இருந்து துணிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் சப்ளை ஆகிறது.
அ.தி.மு.க.- தி.மு.க.-விற்கு நெருக்கம் - எப்படி?
கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய அளவில் டெண்டர் எடுத்து பணிகளை எடுத்துச் செய்தவர் சந்திரசேகர். அதற்காக, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சரை பலமாகவே கவனித்ததாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இன்று தி.மு.க. ஆட்சியில் கோலோச்சிக்கொண்டிருக்கும் அதிகாரிகளில் முக்கியமானவருடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி, தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பொங்கல் பரிசுக்கான மொத்த சப்ளையையும் சந்திரசேகரே கவனித்துக்கொண்டாராம். ஆனால், அதுதான் இன்று வரை தி.மு.க. ஆட்சிக்கு மிக முக்கிய அவப்பெயராக இருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரம்.
சந்திரசேகர் சப்ளை செய்த பொருட்களில் வெல்லம், நெய் உள்ளிட்ட எதுவும் தரமில்லாமல் இருந்ததால், இவரது நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க பரிந்துரை செய்தும் அது நடக்காமல் போனதாம். அந்த அளவுக்கு செல்வாக்காக பவனி வருகிறார் சந்திரசேகர் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.
பா.ஜ.க.-வினரோடு சந்திரசேகரின் பந்தம்!
தமிழ்நாட்டைத் தாண்டி தன்னுடைய தொழில் வீறுநடை போட வேண்டும் என்பதால் தமிழக பா.ஜ.க.-வின் முக்கிய நிர்வாகிகள் பலருடன் இவர் மிக நெருக்கமாக இருந்ததுடன், அவர்களையும் கணக்கே பார்க்காமல் சந்திரசேகர் கவனித்தது தனி வரலாறு.
கமலிற்காக காசு வாங்கிய சந்திரசேகர்?
கடந்த 2021 தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை தடுக்கும் விதமாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து 200C-க்கு மேல் சந்திரசேகர் பணம் பெற்று கமலை தனியாக போட்டியிட வைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து அதில் வெற்றி பெற்றார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
பெற்ற பணத்தை பிரித்து முக்கியவானர்களுக்கு செட்டில் செய்ததாகவும் மீதியை திருப்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்பட்ட நிலையில், அப்போதே அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது யாவரும் அறிந்ததே.

இப்போதும் கூட்டு, தி.மு.க.-விற்கு வேட்டு?
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-விடம் பணம் பெற்று கமலை தனியாக நிற்க வைத்து தி.மு.க.-விற்கு நெருக்கடி கொடுக்க வைத்த சந்திரசேகர் இப்போது தி.மு.க. கூட்டணியில் சீட் கேட்டு நிற்பதை தி.மு.க.-வினரே விரும்பவில்லையாம்.
நம்மிடம் சீட் வாங்கிக் கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு வேலை பார்க்கும் ஸ்லீப்பர் செல்லாக சந்திரசேகர் இருப்பார் என்பதால் அவரை கமல் ஒதுக்கி வைத்தால்தான் மற்ற நிர்வாகிகள் மீது தி.மு.க.-வினருக்கு நம்பிக்கை வரும் என்ற பேச்சு எழுந்துள்ளதாம் அறிவாலயத்தில்.
இப்போதும் கூட அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்து அதற்காக பணியாற்றுவதாகவும் அதற்கு தேவையான இனிப்பு பெட்டிகளை இப்போதே சந்திரசேகர் தயார் செய்துக்கொண்டிருப்பதாகவும் அங்கலாய்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள் அரசல், புரசலாக.
தன்னுடைய தொழிலை விரிவுப்படுத்த தி.மு.க.-வை விட அ.தி.மு.க. ஆட்சியே சரியாக இருக்கும் என்று சந்திரசேகர் கருதுவதாகவும், எனவே அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் கிசுகிசுக்கிறார்கள் மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில்.
- கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தொன்மையானது தமிழ் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
- கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தக் லைஃப் பட ப்ரோமோஷன் விழாவில் கமல் பேசும்போது "தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்தார்.
அப்போது அவர்," கமல் கூறிய கருத்தில் தவறில்லை" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழ் குறித்த கமல் கருத்தில் எந்த தவறும் இல்லை. தமிழில் இருந்து பிறந்ததுதான் சமஸ்கிருதம்.
அதை 24,000 பேர்தான் பேசுகின்றனர். கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தொன்மையானது தமிழ் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம்.
- தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.
நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்.
இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச வை-பை வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.
அமெரிக்காவில் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர்.
ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.
குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும்.
சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன் மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
- பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.
இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.
அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.
இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சமூக ஆர்வலரை லாரி ஏற்றிக் கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும்.
- கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் குவாரி கும்பலால் அவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். ஜெகநாதன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இயற்கை வளங்களைச் சூறையாடுதல், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது.
கரூர், கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அனுமதி இல்லாமலும்,அளவுக்கு அதிகமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்தி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மநீம, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களை கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள்..
— Cheran Pandian (@cherandreams) April 11, 2019
தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள்தானே..






இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.








