search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sripriya"

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல், ஸ்ரீபிரியா போட்டியிடும் தொகுதிகள் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:
     
    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறார்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் வேட்பாளர்களின் நேர்காணல்  கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் தேர்தல் பணிக்குழுவோடு சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.

    நேர்காணலுக்கு பின்னர் 2 நாட்கள் மனு பரிசீலனை நடைபெற்றது. கமல்ஹாசன் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் முழுக்க தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முன்பே கூறி இருந்தார். அதன்படி வேட்பாளர் தேர்வில் கல்வித்தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ந்தேதி கமல்ஹாசன் வெளியிட்டார்.

    நாளை மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்கவிழா என்று கமல் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முதல் பட்டியலில் 21 வேட்பாளர்கள் தான் இடம்பெற்று இருந்தனர். கமீலா நாசர்(மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மவுரியா (வடசென்னை) இருவரை தவிர வேறு பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    குறிப்பாக, கமல்ஹாசன்  தனது சொந்த ஊரான ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற போகும் அம்சங்கள் குறித்தும் எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் நாளை கோவை பொதுக்கூட்டத்தில்  விடை கிடைக்கும் என்பதால்  தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திரள்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் இன்று மாலை கோவை வருகிறார்.


    கமல்ஹாசன் போட்டியிட இருப்பது தென் சென்னையிலா அல்லது ராமநாதபுரத்திலா என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர். நாளை நடக்கும் இந்த கூட்டத்தில் தான் கமல், ஸ்ரீபிரியா, சினேகன், துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விபரங்கள் தெரியவரும். கமல் ராமநாதபுரத்திலும் ஸ்ரீபிரியா தென் சென்னையிலும் மகேந்திரன் கோவையிலும் களம் இறங்கலாம் என்கிறார்கள்.

    நாளை வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது. அதனால் தான் மாற்றத்துக்கான துவக்கவிழா என்கிறார்கள். முதல் பட்டியலை வெளியிட்ட போதே கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் குறை கூறினார்.

    புதிதாக ஒன்றுமே இல்லை. இவை எல்லாமே சிறு வயதில் இருந்தே நான் கேட்ட வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்றார். எனவே கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கின்றன.

    கமல் தனது கட்சிக்காக 100 பேச்சாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள், பொது மேடைகளில் பேச விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் நேர்காணல் நடத்தி, 100 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறந்த பேச்சாளர்கள் மூலம் இவர்களுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மேடைகளில் நாகரிகமாக பேசுவது, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், திட்டங்களை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைப்பது உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, அவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
    80-களில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ரீபிரியா, இயக்குநராக தான் நயன்தாராவை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். #SriPriya #Nayanthara
    ஸ்ரீபிரியா, கமலின் மக்கள் நீதி மய்ய கட்சி பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    நீங்கள் ஓர் இயக்குநராக யாரை வைத்துப் படமெடுக்க விரும்புவீர்கள்?

    நயன்தாரா.

    ரஜினிக்கும், கமலுக்கும் என்ன வித்தியாசம்?

    கமல், எல்லோருடனும் சட்டெனப் பழகிவிடுவார். ரஜினி, ஒருவரைப்பற்றி நன்கு அறிந்த பின்னரே அவரை நண்பராக ஏற்பார். ஆனால், இருவருமே நட்புக்கு அதிக மரியாதை கொடுப்பவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்கள். என்னிடம் முன்னர் பழகிய அதே நட்புடன் அவர்கள் இன்றுவரையிலும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி.

    சினிமாவுக்கு வரவில்லை என்றால், ஸ்ரீபிரியா என்னவாகியிருப்பார்?

    நான் சட்டம் படிக்க ஆசைப்பட்டேன். ஒரு வேளை, வழக்கறிஞராகி இருக்கலாம்.

    சமீபத்தில் உங்களை கவர்ந்த நடிகர்கள்?

    விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். நடிப்பு மட்டுமல்ல, இயல்பிலும் இருவரும் அருமையானவர்கள்.



    சமூக வலைதளங்களின் தாக்கம்?

    சாதகம், பாதகம் இரண்டும் உள்ளன. தியேட்டரில் பாதி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அதைப் பற்றிய விமர்சனத்தைப் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்கிறார்கள். அந்தக் குழுவின் மொத்த உழைப்பையும் தங்களின் நேர்மையற்ற, முதிர்ச்சியற்ற விமர்சனத்தால் விரயமாக்குகிறார்கள். ஒரு படைப்பை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். #SriPriya #Nayanthara

    மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை, வாக்கு ஆகியவை ரகசியம். இதை வெளியில் தெரிவிக்க மாட்டோம் என்று நடிகை ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.
    தஞ்சாவூர்:

    மக்கள் நீதி மய்யத்தின் கிழக்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் தரும.சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீப்ரியா கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் சவுந்திரராஜன், சிவா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதன்பின்னர் ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் அடிக்கடி எங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம். மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக எங்களுடைய கருத்துக்கள் அடங்கிய வீடியோ பதிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் செல்வாக்கில் தமிழகத்தில் ஆட்சி செய்பவர்கள் கூட பிரதமரை சந்திக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி சந்திக்க முடியும்?. வீடியோவை பார்த்துவிட்டு பிரதமர் எங்களை அழைப்பார் என்று நம்புகிறோம். மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி குறித்து பேசினோம்.

    திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்துதான் முழுமையாக பேசப்பட்டது. காவிரி தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு வருகிற 14-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த தீர்ப்பிற்கு பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

    கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்கேற்ற வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தினோம். இதன் மூலம் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர். அடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் இன்னும் அதிகமான மக்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை, வாக்கு ஆகியவை ரகசியம். இதை வெளியில் தெரிவிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×