என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்"

    • மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.
    • ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுமார் 450 இயங்குகின்றன. இந்த லாரிகள் 6 ஆயிரம், 9 ஆயிரம், 12 ஆயிரம் மற்றும் 18 ஆயிரம் லிட்டர் கொள்ளளவை கொண்டவை. மெட்ரோ குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன.

    அவ்வாறு இயக்கப்படக் கூடிய லாரிகளின் உரிமையாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் லாரிகளை இயக்கி வருகின்றனர். ஆனால் அந்த ஒப்பந்தம், கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெற்றது. மீண்டும் புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதிலும், அதனை இறுதி செய்வதிலும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தாமதம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதத்துக்குள் ஒப்பந்தம் போடப்படும் என சொன்னதை நம்பி, லாரி உரிமையாளர்கள் பலர் புதிய லாரிகளை வாங்கியுள்ளனர். ஆனால் நவம்பரில் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுவரை அது இறுதி செய்யப்படவில்லை.

    இதையடுத்து ஒப்பந்தத்தை இறுதி செய்து பணி ஆணைகளை வழங்கக் கோரி மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகளை சந்திக்க வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை.

    இதனால் வாரியத்துக்கு முன்பு வெகு நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

    இதுதொடர்பாக மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரம், செயலாளர் கேசவராவ் கூறுகையில், 'ஒப்பந்தத்தை நம்பி புதிதாக வாங்கிய லாரிக்கான முதலாம் ஆண்டு காப்பீடு கட்டணத் தொகை செலுத்துவதற்கான நாட்களே வந்துவிட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் இறுதியாகவில்லை.

    உரிமையாளர்களில் சிலர் மனவேதனையில் உயிரிழந்தும் போயுள்ளனர். மேலும் பலர் லாரிக்கான மாத தவணை செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

    இதற்காக நாளை முதல் நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எனவே இதில் வாரியம் உடனடியாக முடிவெடுத்து, ஒப்பந்தத்தை இறுதி செய்து ஆணைகளை வழங்க வேண்டும்' என்றனர். வேலைநிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடும் பட்சத்தில் சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    நிலத்தடி நீர் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் நீடிக்கிறது. #CanWater #WaterLorriesStrike
    சென்னை:

    வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடை செய்வதுடன், வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

    அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இன்று 3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்கிறது. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது.

    இதற்கிடையே நிலத்தடிநீர் எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களும் நேற்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் குதித்தனர். கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    இப்போராட்டம் காரணமாக ஒரு சில பகுதிகளில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கேன் குடிநீர் சப்ளை இல்லாததால், குடிநீர் கேன்களை இருப்பு வைத்திருந்த சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடக்கூடாது என்று உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குடிநீர் உறிஞ்சுவதற்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

    அத்துடன், அடுத்தகட்டமாக 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெற்றது. 22ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது விரிவான அறிக்கை வழங்கப்படும் என்று சங்கத் தலைவர் தெரிவித்தார்.

    ஆனால், தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, அவர்கள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை. ஸ்டிரைக் நீடிக்கும் என அறிவித்துள்ளனர். #CanWater #WaterLorriesStrike
    ×