search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking Water Stop"

    • 900 மி.மீட்டர் விட்டம் உடைய ராட்சத குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை முதல் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால் அந்த பகுதிகளில் செல்லும் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள 900 மி.மீட்டர் விட்டம் உடைய ராட்சத குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதன் காரணமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை முதல் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எம்.எம்.டி.ஏ. காலனி, அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, தி.நகர், தேனாம்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், சி.ஐ.டி. நகர், தாய்சா அடுக்குமாடி வளாகம் பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிப்பது நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

    சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. #Puzhallake
    சென்னை:

    சென்னை குடிநீர் தேவைக்கு பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    இந்த ஏரிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. தற்போது வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வருவதால் அங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது.

    சென்னை அருகில் உள்ள சோழவரம் ஏரியில் 1081 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். ஆனால் தற்போது வெறும் ஒரு மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    எனவே சோழவரம் ஏரியில் இருந்து கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு நேரடியாக தண்ணீர் அனுப்ப முடியவில்லை. ஆகவே 3 ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வந்தது. தண்ணீர் மிகவும் குறைந்ததால் சோழவரம் ஏரியில் இருக்கும் நீர் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    புழல் ஏரியில் தற்போது 783 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. பூண்டியில் 14 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 486 மில்லியன் கன அடியும் தண்ணீர் உள்ளது. சோழவரத்தில் 1 கன அடி இருக்கிறது.

    சென்னையில் உள்ள 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி. ஆனால் தற்போது ஆயிரத்து 284 மில்லியன் கன அடி தண்ணீர்தான் உள்ளது. #Puzhallake


    ×