search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ambattur railway station"

    • நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • அம்பத்தூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும்.

    சென்னை:

    அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் 6-வது லெவல்-கிராசிங் பகுதியில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது.

    நீண்ட ஆண்டுகளாக மக்களால் அந்த நடைமேம்பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நடை மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டது.

    இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த நடைமேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அந்த நடைமேம்பாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

    அந்த நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 வாரங்களுக்கு முன்பு அந்த நடைமேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் தண்டவாளத்தை மக்கள் கடப்பதற்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதையடுத்து அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்த இடத்தில் புதிதாக சுரங்கப்பாதை கட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து முடித்து விட்டனர்.

    அதன்படி புதிதாக கட்டப்பட இருக்கும் சுரங்கப்பாதையில் மக்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கலாம் என்றும் முடிவு செயப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அந்த சுரங்க பாதையை சற்று பெரிதாக கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் அருகில் மார்க்கெட் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அதிகம் வருகின்றன. சிறிய பஸ்களும் அங்கு இயக்கப்படுகின்றன.

    இந்த வாகனங்கள் அனைத்தும் சுரங்க பாதை வழியாக இயக்கப்படும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று அம்பத்தூர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தகைய வசதிகள் செய்யப்படும் பட்சத்தில் அம்பத்தூரில் இருந்து வெங்கடாபுரம், கள்ளிக்குப்பம், கருக்கு, விஜயலட்சுமிபுரம் மற்றும் மேனாம்பேடு பகுதிகளுக்கு செல்பவர்கள் மிக மிக எளிதாக செல்ல முடியும்.

    அம்பத்தூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும்.

    தற்போது காலை, மாலை நேரத்தில் அம்பத்தூர் கனரக வங்கி பஸ் நிறுத்தம் முதல் அம்பத்தூர் ஓ.டி. வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் கட்டப்படும் புதிய சுரங்கப் பாதையை பெரிதாக கட்டினால் நிறைய வாகனங்கள் அந்த பாதையை பயன்படுத்தும்.

    இதனால் அம்பத்ரிதூல் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இதை கருத்தில் கொண்டு அம்பத்தூர் ரெயில் நிலைய சுரங்கப் பாதையை பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

    அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே ஜாமீனில் வந்த ரவுடியை பழிக்கு பழியாக தீர்த்துகட்டிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    ஓட்டேரியை சேர்ந்தவர் சத்யா என்கிற செங்குட்டுவன் (வயது 37) ரவுடி. நேற்று இரவு அவர் அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் சத்யாவை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சத்யா உரிழந்தார்.

    இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப் பழியாக சத்யா படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சின்னாவின் கூட்டாளியான ராதா படுகொலை செய்யப்பட்டார். இதில் சத்யா குற்றவாளி ஆவார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஜெயிலில் இருந்த சத்யா ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் வேப்பம்பட்டில் உள்ள 2-வது மனைவி வீட்டில் தங்கி இருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சத்யாவை திட்டமிட்டு தீர்த்துகட்டி விட்டனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மோதியதில் கண்டெய்னர் விழுந்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#accident

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை 16 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஜல்லிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் பின்னோக்கி சென்றது.

    திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அருகில் ரெயில்வே ஊழியர்கள் பயன்படுத்த நிற்க வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மீது ரெயில் மோதியது.

    மோதிய வேகத்தில் கண்டெய்னர் கவிழ்ந்து விழுந்ததில் அருகே அமர்ந்து இருந்த அம்பத்தூர் இந்திராகாந்தி நகரை சேர்ந்த மணி (70) என்ற முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்தார். ரெயிலை கண்டெய்னர் பெட்டி தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சரக்கு ரெயிலில் என்ஜின்கள் பொருத்தப்படாத நிலையில் சரக்கு ரெயில் எப்படி பின்னோக்கி வந்தது என்பது தெரியவில்லை.

    மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் பாதையில் இன்று விடுமுறை நாள் என்பதால் பெரும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று பொது மக்கள் தெரிவித்தனர்.

    விபத்து குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #accident

    ×