search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை செய்யப்பட்ட  ஆலங்குளம் வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
    X

    கொலை செய்யப்பட்ட ஆலங்குளம் வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

    • ஆலங்குளம் அருகே கொலை செய்யப்பட்ட பேட்டை வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக இன்று போராட்டம் நடத்தினர்.
    • இச்சம்பவத்தில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    ஆலங்குளம்:

    நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சேதுபதி் (வயது 20).

    இவர் தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கருவந்தாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழா வில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது ஒரு கும்பல் சேதுபதியை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

    இதனால் ஆவேமடைந்த அவரது உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதற்கிடையே, கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதில் 2 பேர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×