என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகள் பிறந்தநாளை கொண்டாட கணவர் வராததால் பெண் தற்கொலை
- மகளின் பிறந்த நாளை கொண்டாட முருகன் வராததால் மனைவி கீதா மனவேதனை அடைந்தார்.
- கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
போரூர்:
ராமாபுரம், பூத்தப்பேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் டிரைவர். இவரது மனைவி கீதா (வயது35). கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் சொந்த ஊரான வந்தவாசிக்கு சென்று விட்டார்.
இதன் காரணமாக நேற்று முன்தினம் மகளின் பிறந்தநாளை கொண்டாடவில்லை. இந்த நிலையில் மகளின் பிறந்த நாளை கொண்டாட முருகன் வராததால் மனைவி கீதா மனவேதனை அடைந்தார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கீதா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






