search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
    X

    செஞ்சி அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

    • போலீசார் விசாரணையில் பெர்த்தோஸ் குடும்ப பிரச்சினை காரணமா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • செஞ்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்எடையாளம் கிராம பஞ்சாயத்துக்குட்ட கடக்கால்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்லா. அவரது மனைவி பெர்த்தோஸ் (வயது 22). இவர் இன்று காலை தனது கைக்குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் பெர்த்தோஸ் தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்தார். சிறிது நேரத்தில் 2 பேரின் உடல்கள் கிணற்றில் மிதந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெர்த்தோஸ் குடும்ப பிரச்சினை காரணமா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×