என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manonmaniam Sundaranar University"

    • தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
    • நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தவைக்கப்படுகிறது.

    மேலும், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மனோன்மணியம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    • 99 மையங்களில் இன்று காலை தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வந்திருந்தனர்.
    • தற்போது கசிந்த வினாத்தாளுக்கு பதிலாக வேறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

    சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 106 கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    இங்கு 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 107-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.

    இந்நிலையில் தற்போது இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரிகளில் 'இண்டஸ்ட்டிரியல் லா' என்ற பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 99 மையங்களில் இன்று காலை தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வந்திருந்தனர்.

    தொடர்ந்து மாணவர்கள் தேர்வறைக்குள் வந்ததும் அவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களிலேயே அந்த வினாத்தாள்கள் மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டன. வினாத்தாள் ஏற்கனவே கசிந்துவிட்டதாகவும், அதனால் இன்று நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வினாத்தாள்கள் திரும்ப பெறப்பட்டு விட்டதாகவும் மையங்களில் தேர்வு பணியில் இருந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்த பதிலில், இண்டஸ்ட்டிரியல் லா என்ற பாடத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்து விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வினை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம் என்றனர்.

    இதனிடையே வருகிற 29-ந்தேதி வரை கல்லூரிகளில் பருவத்தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே தற்போது கசிந்த வினாத்தாளுக்கு பதிலாக வேறு வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்படும். அதனை தொடர்ந்து இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வருகிற 30 அல்லது 31-ந்தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வாளர்கள் தெரிவித்தனர்.

    பல்கலைக்கழக தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள் கசிந்தது எப்படி?, இதற்கு காரண மானவர்கள் யார்? என்பது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது.

    • புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
    • பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை டவுனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். தொடர்ந்து அங்கு தற்காலிக பேராசிரியராக சில வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது அங்கு வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த அம்பையை சேர்ந்த கண்ணன்(வயது 55) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும், தனது ஆராய்ச்சி படிப்பை முடிப்பதற்கு பல்வேறு தடைகளை அவர் ஏற்படுத்தியதாகவும் அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை மாநில மகளிர் ஆணையம், பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோருக்கு சமீபத்தில் புகார் மனு அளித்தார்.

    அந்த புகாரையடுத்து மகளிர் ஆணைய அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.

    இதனிடையே இளம்பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாணவியாக இருந்தபோது பேராசிரியர் கண்ணன் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டு அசவுகரியமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் புகார் அளித்தாா.

    அதன் அடிப்படையில் நெல்லை மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கீதா, டவுன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட அந்த முன்னாள் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் அவரது புகார் மனு குறித்து பல்கலைக்கழக அளவில் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்திட நேற்று முன்தினம் துணை வேந்தர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி, டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் கண்ணன் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)-பாலியல் துன்புறுத்தல் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • எந்த கல்லூரியிலும் பணியாற்ற விடாமல் இடையூறு.
    • மாநில பெண்கள் ஆணையத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் புகார் மனு.

    நெல்லை:

    நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த 2021-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ கத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

    இந்நிலையில் அங்குள்ள பேராசிரியர் ஒருவர் அந்த மாணவி பட்டம் பெறுவதற்கு தாமதம் ஏற்படுத்தி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு அங்குள்ள பேராசிரியர் மீது அந்த இளம் பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார்.

    இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறை பேராசிரியர் இந்த மாணவியை எந்த கல்லூரியிலும் பணியாற்ற விடாமல் இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளார்.

    தற்போது மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வரும் இந்த பெண்ணுக்கு சில மாணவர்களை வைத்து பொய் புகார் கொடுத்து தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும், முனைவர் பட்டம் பெரும் காலத்தில் இருந்து பாலியல் ரீதியான ஆசைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் நீண்ட ஆண்டுகளாக தன்னுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் பேராசிரியர் மாநில பெண்கள் ஆணையத்திற்கும், உயர்கல்வித்துறைக்கும் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் மனு எதிரொலியாக மாநில உயர்கல்வித்துறை விசாரணை நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மாநில பெண்கள் ஆணையமும் நேரில் வந்து பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்த உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆண்கள் ஆக்கி அணி 2-வது இடம் பிடித்தது.
    • வெற்றி பெற்ற அணியினரையும், ஆக்கி வீரர் கார்த்திக்கையும் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.

    நெல்லை:

    தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த மாதம் 6 நாட்கள் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    இதில் 68 பல்கலை கழகங்களை சேர்ந்த ஆண்கள் ஆக்கி அணிகள் பங்கு பெற்றன. இந்த போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆண்கள் ஆக்கி அணி 2-வது இடம் பிடித்து வெற்றிக் கோப்பையினை கைப்பற்றியது.

    இதன் மூலம் அடுத்த மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    மேலும் கோவில்பட்டியை சேர்ந்த ம.சு.பல்கலைக் கழக விளையாட்டு வீரர் கார்த்திக் அண்மையில் ஆசிய அளவில் நடைபெற்ற பல்கலைக் கழகத்திற்கு இடையேயான போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்.

    வெற்றி பெற்ற அணியினரையும், ஆக்கி வீரர் கார்த்திக்கையும் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார். மேலும் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் போது பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, நிதி அலுவலர் மரிய ஜோசப், விளையாட்டு மைய இயக்குநர் ஆறுமுகம், பல்கலைக் கழக அணி மேலாளர் குருசித்ர சண்முக பாரதி, பல்கலை கழக உடற்கல்வி, விளையாட்டுத்துறை உதவி பேராசிரியர் தங்கராஜ், கோவில்பட்டி ஆண்கள் சிறப்பு விடுதி ஆக்கி அணி பயிற்சியாளர் முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை பாராட்டினர்.

    • பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • பளுதூக்கும் போட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் பளுதூக்கும் விளையாட்டு குறித்த "பளுதூக்குதல் பற்றி விரிவான வழிகாட்டி" என்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், புவி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியருமான ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் பளுதூக்கும் விளையாட்டு போட்டிகளின் தேசிய நடுவரும், நெல்லை மாவட்ட பயிற்சியாளருமான ஆரோக்கியம் கலந்து கொண்டு பளுதூக்கும் போட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் கலந்த கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை தலைவர் உதவிப்பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டுத்துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் சேது நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் துரை செய்திருந்தார்.

    • இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
    • கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 29-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கழைக் கழகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அரங்கத்தில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.விழாவுக்கு தமிழக கவர்னரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கினார்.

    இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 13,236 ஆண்களும், 30 ஆயிரத்து 625 பெண்கள் என மொத்தம் 43,861 பேர் பட்டம் பெற தகுதியான வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    இவர்களில் ஆராய்ச்சி படிப்பு முடித்த 948 பேர் மற்றும் பல்வேறு பாடங் களில் முதலாம் இடம் பிடித்து பதக்கம் பெறும் 105 நபர்கள் என 1053 நபர்க ளுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    விழாவில் கவர்னர் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். அந்த வகையில் திருச்செந்தூரில் உள்ள கோவிந்தம்மாள் கல்லூரி யில் இளங்கலை கணிதம் படித்த திவ்யா என்ற மாணவிக்கு தங்கப் பதக்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    ஆத்தூரை சேர்ந்த மாணவி திவ்யா தற்போது தற்போது ஆதித்தனார் கல்லூரியில் 2-ம் ஆண்டு முதுகலை கணிதம் படித்து வருகிறார். இவர் இளங்கலை கணித பாடப்பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். மாணவியின் தந்தை லட்சுமணன் என்பவர் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் கணக்கராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் கோவிந்தம்மாள் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிப்பில் மாணவி பாத்திமா சஹாரா தங்கப் பதக்கமும், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பில் மாணவி ஜெயரூபி தங்கப்பதக்கமும் கவர்னரிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டனர்.

    இதே போல் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 5 பேர் டாக்டர் பட்டமும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் படித்த 3 பேரும் டாக்டர் பட்டம் பெற்றனர்.

    மேலும் காயல்பட்டினம் மகளிர் கல்லூரி மாணவி ஆங்கிலம் மற்றும் அரபிக் பாடங்களில் முதலிடம் பிடித்து 2 பதக்கங்களை பெற்றார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், நயினார் நாகேந்திரன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பல்கலைக் கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை தமிழ் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
    • மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம் சார்பில் இளநிலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் இளநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய பாடங்களும், தமிழ், ஆங்கிலம், வரலாறு பொருளாதாரம், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், வணிகவியல், கணிதம், இயற்பியல் வேதியியல் மற்றும் முதுநிலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய முதுநிலை பாடங்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த பாடங்களில் சேர்வதற்கான தேதி வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம், (www.msuniv.ac.in/Distance-Education) விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இத்தகவலை பதிவாளர் சாக்ரட்டீஸ் தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
    • 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.

    முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.

    தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.

    இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

    விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

    இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    • தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
    • தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர "நெட்" (தேசிய தகுதித் தேர்வு) அல்லது "செட்" (மாநில அளவிலான தகுதித் தேர்வு) ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

    நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியா முழுவதும் எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது கல்லூரியிலும் உதவிப் பேராசிரிய ராகலாம். செட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அந்த மாநிலத்தில் மட்டுமே பணிபுரிய முடியும்.

    அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்படும் செட் தேர்வில் தேர்ச்சி பெறும்போது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆகலாம்.

    இந்த தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகள் வழங்கப்படும். கடைசியாக 2015 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியது.

    இந்நிலையில் 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

    இதனை தொடர்ந்து, செட் தேர்வு நடத்து வதற்கான விண்ணப்பங்களை பெற்று தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என அறிவித்திருந்தது.

    இந்த தேர்வில் கலந்துக்கொள்ள சுமார் 99 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். இந்த நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் இருந்து இன்று திடீரென ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அந்த அறிவிப்பில் தொழில்நுட்ப காரணங்களுக்காக உதவி பேராசிரியர்கள் பணிக்காக நடத்தப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (செட்) ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். முதன்முறையாக இந்த தேர்வு இணைய வழியில் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளிலோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலோ அறிந்து கொள்ளலாம்.
    • விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.

    நெல்லை:

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் ஏப்ரல் 2022-ல் நடத்தப்பட்ட இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகளிலோ அல்லது www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்திலோ அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ய விருப்பமுடைய மாணவர்கள் அதற்குரிய படிவங்களை www.msuniv.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் முதலில் விடைத்தாள் நகலைப் பெற்றுக்கொண்ட பின்னரே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    விடைத்தாள் நகலை இணையதளம் வழியாக பெற உரிய கட்டணத்துடன் படிவம் ஏ-யை நாளை ( புதன் கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30- ந் தேதி ஆகும்.விடைத்தாள் நகல்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பின்னர் மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.

    மறு மதிப்பீடு செய்ய இணையதளம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி படிவம் பி-யை அடுத்த மாதம் 9-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாளாகும். இந்த தகவலை பல்கலைக்கழக பதிவாளர் ( பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

    சென்னையில் தமிழறிஞர் க.ப. அறவாணன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Aravanan

    சென்னை:

    தமிழறிஞரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான க.ப. அறவாணன் சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

    அறவாணன் சென்னை அமைந்தகரை முனி ரத்தினம் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். இன்று அதிகாலையில் திடீரென்று அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி உயிர் பிரிந்தது.

    அறவாணன் மரண செய்தி அறிந்ததும் ஏராளமான தமிழறிஞர்கள் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    க.ப.அறவாணன் நெல்லை மாவட்டம் கடலங்குடியில் 9.8.1941-ல் பிறந்தார். தமிழில் புலமைபெற்ற அவர் தமிழில் உயர்கல்வி பெற்று புதுவை மத்திய பல்கலை கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார். பின்னர் லயோலா கல்லூரியிலும் பணியாற்றினார்.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றியவர். பல பல்கலைக் கழகங்களின் பாடத்திட்ட குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

    50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். 3 முறை தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருதையும் பெற்று இருக்கிறார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் இலக்கிய பரிசு பெற்றவர்.

    க.ப.அறவாணன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழறிஞரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான க.ப.அறவாணன் மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். தமிழின் தொன்மை குறித்த ஆய்வு நோக்கும் தமிழ் வளர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தமிழறிஞரான க.ப.அறவாணன் நவீனத் தமிழுக்கு செய்துள்ள தொண்டு அளப்பரியது.

    கல்வித்துறையில் தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் வகையில் பல பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் பங்கேற்று சிறப்பான பாடத்திட்டங்களை உருவாக்கத் துணை நின்றவர். மொழியியல், மானுடவியல், சமூகவியல் உள்ளிட்ட துறைகளில் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்.

    அறிவியல் கண்ணோட்டத்துடன் தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்குத் துணை நின்றவர். தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்ற க.ப.அறவாணன் தனது பெயரில் அறவாணன் விருது என்பதை உருவாக்கி அதனை தமிழ்ச் சான்றோருக்கு வழங்கி தமிழ் மொழியின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியவர்.

    திராவிட இயக்கத்தின் மீது பற்றும், முத்தமிழறிஞர் கலைஞரிடம் தனிப்பட்ட அன்பும் நட்பும் கொண்டிருந்தவர் க.ப.அறவாணன்.

    நமது இனத்தின் வரலாற்றை அவசியம் படிப்பதுடன், இனத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் நாமும் வரலாறு படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதன்படி வாழ்ந்த அறவாணன் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்குப் பேரிழப்பாகும்.

    தமிழறிஞர் க.ப.அறவாணனை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தமிழ்ச் சான்றோர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    க.ப.அறவாணன் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருத்தமும், துயரமும் அடைகிறேன். பழகுவதற்கு இனியவர், சிறந்த பண்பாளர். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    நெல்லை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் க.ப.அறவாணன் மரணச்செய்தி கேட்டு துயரமடைந்தேன். தமிழ றிஞரின் மரணம் தமிழகத் திற்கும் உலக தமிழருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக் கிறேன். அவரது குடும்பத் தாருக்கு தமிழக பா.ஜனதா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    க.ப.அறவாணன் மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Aravanan

    ×