என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
- பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- பளுதூக்கும் போட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் பளுதூக்கும் விளையாட்டு குறித்த "பளுதூக்குதல் பற்றி விரிவான வழிகாட்டி" என்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், புவி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியருமான ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பளுதூக்கும் விளையாட்டு போட்டிகளின் தேசிய நடுவரும், நெல்லை மாவட்ட பயிற்சியாளருமான ஆரோக்கியம் கலந்து கொண்டு பளுதூக்கும் போட்டி குறித்து மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் கலந்த கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை தலைவர் உதவிப்பேராசிரியர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டுத்துறையை சேர்ந்த மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் சேது நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் துரை செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்