search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்கவுண்ட்டர்"

    • பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைில் இந்திய பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி செல்லும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தும்போது, வீரர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதனால் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதியில் அடிக்கடி வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

    நேற்று பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடத்தை வீரர்கள் நெருங்கிய நிலையில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இருந்தபோதிலும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் பூஞ்ச் ரஜோரியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    நேற்று பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய வீரர்களின் தியாகத்தை வைத்து நீங்கள் (பா.ஜனதா) மீண்டும் அரசியல் செய்ய விரும்புகிறீர்களா?. 2024-ல் மீண்டும் புல்வாமா விவகாரத்தை வைத்து வாக்கு கேட்க விரும்புகிறீர்களா?.

    பூஞ்ச் தாக்குதல் குறித்து நாங்கள் கேள்வி கேட்டால், அதன்பின் அவர்கள் எங்களை டெல்லி அல்லது நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.
    • இன்று காலை கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில் 4 வீரர்கள் வீரமரணம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜோரியில் தேரா கி காலி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் இதேபோன்று ராஜோரியில் நடைபெற்ற பயங்கர சண்டையில் இரண்டு கேப்டன்கள் உள்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    • சோபியான் மாவட்டத்தில் பயங்கிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.
    • தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக்கொலை.

    ஜம்மு-காஷ்மீரில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் அம்மாநில காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாத செயல்களையும் தடுத்து வருகிறார்கள்.

    இன்று சோபியான் மாவட்டத்தில் உள்ள கதோஹலன் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட டி.ஆர்.எஃப் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    இதுதொடர்பான முழுத் தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என காஷ்மீர் மண்டல காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 3 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த வீடியோவை குள்ள விஷ்வாசென்றவரில் ஒருவரே எடுத்துள்ளார்.
    • காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால் தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்தி வைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட திருப்பந்தியூர் கிராமத்தில் பதுங்கி இருந்த ரவுடி குள்ள விஷ்வா போலீசாரின் என் கவுண்டருக்கு பலியானான்.

    ரவுடி விஷ்வாவை பிடிக்கச் சென்றபோது போலீசாரை வெட்டியதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி விஷ்வா உயிரிழந்து விட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    ஏ பிளஸ் வகையை சேர்ந்த ரவுடியான குள்ள விஷ்வா மீது 3 கொலை, 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 24 வழக்குகள் இருப்பதாகவும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனங்களை மிரட்டி விஷ்வா மாமூல் வாங்கி வந்ததாகவும் இதுதொடர்பான மோதல் காரணமாகவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போட சென்ற ரவுடி விஷ்வாவின் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போனில் பேசியபடியே சுட்டு விடவா? என்று கேட்கும் மிரட்டல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    3 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த வீடியோவை குள்ள விஷ்வாவுடன் சென்றவரில் ஒருவரே எடுத்துள்ளார். செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ காவல் நிலையத்தின் உள்ளேயே வைத்து போலீசுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    போலீஸ் நிலையத்தில் வைத்து விடுக்கப்பட்ட இந்த என்கவுண்டர் மிரட்டலால் கடும் அதிர்ச்சி அடைந்த குள்ள விஷ்வா அது தொடர்பாக உடனடியாக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த மாதம் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது வழக்கில் பிடிவாரண்டில் ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ரிமாண்ட் செய்யப்பட்டேன். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பிணை பெற்றேன்.

    நான் சிறையை விட்டு வெளியே வந்தவுடன் காவல் நிலையத்தில் கையெழுத்து போடவில்லை. எனது பிணை மனுவை ரத்து செய்யச் சொல்லி காவல் துறையினர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி வழக்கு போட்டனர்.

    நான் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி முதல் சிவகங்கையில் தங்கி அந்த காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தேன். ஆனாலும் எனது பிணை மனு ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். எனது வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நான் தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கடந்த மாதம் 1-ந்தேதி அன்று உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின் நகல் கோரி எனது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சில காரணங்களால் அந்த நகல் 24-ந்தேதி அன்று கிடைத்தது.

    அந்த நகலை வழக்கறிஞரிடம் இருந்து நான் 26-ந்தேதி பெற்றுக்கொண்டேன். நீதிமன்ற உத்தரவின்படி நான் 27-ந்தேதி அன்று காலை 10.20 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் புதூர காவல் நிலையத்தில் கையெழுத்திட்டேன்.

    28-ந்தேதி அன்று காலை 10.20 மணிக்கு நான் கையெழுத்தட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் காவல் துறையினர் என்னை காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைத்தனர்.

    காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால் தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்தி வைத்தனர். காவல் துறையினரின் சிறப்பு படையினர் என்னிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் மதியம் 12 மணியளவில் காவல் ஆய்வாளரிடம் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்ன செய்வது என்று கேட்டார்.

    அப்போது அவர் கையெழுத்து வாங்கவா 'சுட்டு விடவா' என்று கேட்டார். இதனால் நான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன். தயாளன் ஆய்வாளர் பரந்தாமனிடம் பேசிய வீடியோ ஆதாரம் உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நான் கையெழுத்திட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் என்னை சுட்டு விடலாமா? என சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆய்வாளரிடம் பேசியதில் இருந்து என்னை ஆய்வாளர் என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகிறேன்.

    எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் உள்ளிட்ட காவல் துறையினரே பொறுப்பு என்பதை இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே என்னை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தக்க விசாரணை நடத்த வேண்டுகிறேன்.

    இவ்வறு அந்த புகாரில் ரவுடி விஷ்வா கூறியிருக்கிறார்.

    இந்த கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுட்டுக்கொல்லப்பட்டு உள்ள விஷ்வா, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வயலூர் கிளாஸ் கிராமத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.
    • காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் நேற்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அவர் எழுதி உள்ள கடிதத்தில், என்மீது போலி என்கவுண்ட்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி காவல் ஆய்வாளர் தயாளன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.

    காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரவுடி விஷ்வா கடிதம் எழுதியதாக கூறப்படும் தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • அனந்த்நாக் சண்டைக்குப்பின் பயங்கரவாதிகளை தேடும்பணி தீவிரம்
    • உயிரிழந்த பயங்கரவாதி யார்? என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை

    ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டம் ஹர்லாங்காவில் உள்ள உரி பகுதியில் ராணுவ வீரர்கள் பாரமுல்லா போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்? என்பது குறித்து அடையாம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராணுவ வீரர் வீர மரணம் அடைந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்துள்ளனர்
    • தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது

    ஜம்மு-காஷ்மீர்,  ஜம்முவில் உள்ள ரஜோரி மாவட்டத்தின் நர்ல்லா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்புப்படை வீரர்கள் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீர மரணம அடைந்தார். மேலும், அதிகாரி ஒருவர் உள்ளபட மூன்று பேர் காயம் அடைந்தனர்.

    அத்துடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த 21-வது ராணுவ மோப்பநாய் பிரிவின் 6 வயது பெண் மோப்ப நாயும் சண்டையில் உயிரிழந்தது. தன்னை வழிநடுத்துபவரை பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டில் இருந்து பாதுகாக்கும் வகையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டது.

    பாதுகாப்புப்படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சண்டை நீடித்து வரும் நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ×