என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலியல் தொல்லை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
- பாலியல் தொல்லை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
- மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் என்ற தினேஷ்குமார் (வயது 19). இவர் 18 வயது மாற்றுத் திறனாளி பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பம் தரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள தினேஷ்குமார் மறுத்துள்ளார். இதனிடையே, அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தினேஷ்குமார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.






