என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social service"

    • அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார்.
    • பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பொதுமக்களுக்கு ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் ரத்தினம் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96.

    பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்தவர் ரத்தினம். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.

    1929-ல் பிறந்த ரத்தினம், 1959-ல் மருத்துவர் பணியைத் தொடங்கினார். அப்போது, ரூ.2-க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர், ரூ.10-க்கு மருத்துவம் பார்த்து வந்தார். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் பிரபலமானார்.

    கடைசி வரை கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது மறைவு பட்டுக்கோட்டை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அவரது உடல் நாளை (ஜூன் 8) அடக்கம் செய்யப்படவுள்ளது. தினகரன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

    • கடலூர் மாவட்டத்தில் சுதந்திரதின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம் அறிவித்துள்ளார்.
    • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கையில் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறையில் பணிபுரிந்து மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவை நிறுவனங்களுக்கும் ரொக்க பரிசு, தங்கபதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.இவ்விருது பெற தகுதியுடைய விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் 30- ந்தேதி க்குள் விண்ணப்பித்து அதன் நகலை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, செம்மண்டலம், கடலூர் என்ற விலாசத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    மும்பையை சேர்ந்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்துக்காக சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே விருப்பம் தெரிவித்துள்ளார். #MeghanMarkle #MynaMahilaFoundation
    லண்டன்:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருவது மைனா மகிளா தொண்டு நிறுவனம். கடந்த 2015-ல் தொடங்கப்படட இந்த அமைப்பு பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார்.

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹாரிக்கும் மேகன் மார்கலுக்கும் நேற்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.



    இதில் மைனா மகிளா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுஹானி ஜலோடா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், லண்டனில் உள்ள கொல்கத்தா கேண்டீனில் நாளை நடக்கவுள்ள நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    திருமணம் முடிந்ததும் மணமகளை சென்று பார்த்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்தினர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர்களிடம், இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் அரசு அங்கீகரித்துள்ள ஏழு இந்திய தொண்டு நிறுவனங்களில் மைனா மகிளா தொண்டு நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #MeghanMarkle #MynaMahilaFoundation
    ×