search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ulcer"

    • பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்.
    • தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

    விலைவாசி உயர்வு, குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலத்தை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் மக்களை நேரம் காலம் பார்க்காமலும், இரவு பகல் என்று நினைக்காமலும் வேலை செய்ய வைக்கிறது. ஆனால், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக்கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.

    பகல் நேரத்தில் வேலைசெய்யும் பெண்களை விட இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. அதனால் இரவுநேர வேலையை குறைத்துக்கொள்வது நல்லது. எப்படி குறைக்கலாம் என்று தானே கேட்கிறீர்கள். மாதம் முழுவதும் இரவுநேர வேலை பார்ப்பதைவிட மாதம் ஒருமுறை மட்டும் இரவுநேர வேலை பார்க்கலாம்.

     2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரவுநேர வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இரவுநேரத்தில் வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படுகிறது. அதனால் உடலும், மனதும் சோர்வடையும்.

    இரவுநேரத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக வேலைபார்த்தாலும் சில தடுமாற்றம் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடல் ஓய்வெடுக்கச் சொல்லும். அந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இரவுநேரத்தில் வேலை செய்து பகலில் தூங்குவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினை ஏற்படும். வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் குடல் பிரச்சினை, இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்தும்.

     நீங்கள் இரவில் வேலை செய்துவிட்டு பகலில் நேரத்தில் தூங்கினாலும் உங்களால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால் நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

    இரவுநேரத்தில் வேலை செய்பவர்கள் காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

     இரவுநேரத்தில் வேலைபார்ப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

    • சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும்.

    உடலுக்கு குளிர்ச்சியானது என்ற வகையில் சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் உணவுக்காக மட்டுமல்லாமல் தண்ணீர் சேமிக்கும் கலன் (சுரைக் குடுவை) ஆக சுரைக்காய் பயன்படுத்தப்பட்டது. தற்போது உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பந்தல் சாகுபடியில் சுரைக்காய் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதை விட இயற்கை முறையில் அதிக மகசூல் ஈட்ட முடியும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பூக்கும் சமயத்தில் கொடியின் வேர்பகுதியில் ஊற்றினால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாக சுரைக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் குறைவாகவே காணப்படும். எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்வது எளிது.

    சுரைக்காய் கொடிகளை தரையில் படர விட்டும், குச்சிகளை ஊன்றி அதன் மீது படர விட்டும், பந்தல் அமைத்தும் சாகுபடி செய்யலாம். கிராமங்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் கூரை மீது சுரைக்காய் கொடியை படர விடுவதும் உண்டு. ஆனால் பந்தல் சாகுபடி தவிர்த்து மற்ற முறைகளில் பயிர் செய்யும் போது மழை, ஈரப்பதம் போன்றவற்றால் சுரைக்காயின் மகசூல் பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளது.

    ஆனால் பந்தல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பதுடன் செடிகளின் ஆயுள் காலமும் அதிகரிக்கும். ஆரம்ப கட்டங்களில் பந்தல் அமைக்க அதிக அளவில் செலவு பிடிக்கும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பந்தல் சாகுபடியில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஒரு முறை பந்தல் அமைத்தால் பல ஆண்டுகள் அதனை பயன்படுத்த முடியும்.

    அதுமட்டுமல்லாமல் அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும் சுரைக்காய் மட்டுமல்லாமல் பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை மாற்றி மாற்றி சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் வருவாய் ஈட்ட முடியும். வீரிய ஒட்டு ரகங்கள் நாட்டு விதைகள் மூலம் சாகுபடி செய்யும் போது ஆண்டுக்கு ஒரு பட்டத்தில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது பல வீரிய ஒட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் சுரைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

    சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற சிறந்த மருந்தாக செயல்படும். பெண்களுக்கு உண்டாகும் ரத்த சோகையைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

    ஒவ்வொருவருக்கும் சில சுய சுகாதாரங்கள் அவசியம். அவரவர் அறியாமலேயே சில சுகாதாரமற்ற பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும். அவற்றில் சில கீழே கூறப்பட்டுள்ளது. அவற்றினை நாம் சரி செய்து கொள்ளலாமே.
    ஒவ்வொருவருக்கும் சில சுய சுகாதாரங்கள் அவசியம். அவரவர் அறியாமலேயே சில சுகாதாரமற்ற பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும். அவற்றில் சில கீழே கூறப்பட்டுள்ளது. அவற்றினை நாம் சரி செய்து கொள்ளலாமே.

    * முகத்தில் சிறு பரு வந்தாலும் பலருக்கு ஒரு பழக்கம். அதனை பிய்த்து பிய்த்து கிருமி தாக்குதல், மறையா வடு இவற்றினை ஏற்படுத்தி விடுவர்.

    * வலி இருந்தால் அதன் மீது ஐஸ் வையுங்கள். சரும மருத்துவர் உதவி பெறுங்கள். முகத்தினை வலிய கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது சுகாதாரமே. மேலும் பருக்களின் மீது நகம் படுவதும் ஆபத்தானதே.

    * இம்மாதிரி முகத்தில் பருக்கள், கட்டிகள் வருவதற்கு சில காரணங்களில் ஒன்று அவர்களது கை குட்டைகள், துண்டுகள்தான் இவை சுகாதாரமற்று, துவைக்காமல் அழுக்காக இருப்பதுதான். பல நாட்கள் அதே கைக்குட்டை, துண்டினை உபயோகிப்பது நோயினை ஓடி சென்று வரவழைப்பதாகும். வியர்வை, அழுக்கு போன்றவை துண்டு, கை குட்டைகளில் படிவதால் இதனை அன்றாடம் முறையாய் சுத்தம் செய்வது அவசியம்.

    இதே போன்று படுக்கை விரிப்பு, தலையணை உரைகளை மாதக் கணக்கில் துவைக்காமல் இருந்தால் அநேக கிருமிகளின் நிரந்தர உறைவிடமே மனித உடல்தான் என்றாகி விடும். படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைப்பதே சிறந்தது.

    * சிலர் காதினை சுத்தம் செய்கின்றேன் என்கிற பெயரில் பல கூரிய ஆயுதங்களை உபயோகிப்பது வழக்கம். இதனால் ஏற்படும் பாதிப்பில் யாரும் அக்கறை கொள்வதில்லை. காதில் நிரந்தர பாதிப்புகள் ஏற்படலாம்.

    ஆகவே முதலில் இப்பழக்கத்தினை கை விடுங்கள். பஞ்சு கொண்ட குச்சியாக இருந்தாலும் அதனை தொண்டை வரை உள் விட்டு உள்காதை தேய் தேய் என தேய்த்து சுத்தம் செய்ய வேண்டாம். உள் காதில் புண், பாதிப்பு என பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். மேலும் காதில் உள் உள்ள கீகிஙீ மேலும் உள் தள்ளப்படலாம். பஞ்சு உள்ளே சிக்கிக் கொள்ளலாம். உள் அழுக்கினை நீக்க மருத்துவர் மருந்தினை சிபாரிசு செய்வார். அதனையே பயன்படுத்தவும்.

    * அன்றாடம் பள்ளிக்கு, அலவலகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது பலரின் வழக்கம். இது நல்லதே. ஆனால் அதனை சுத்தமே செய்யாமல் தொடர்ந்து அந்த பாட்டிலிலேயே தண்ணீர் கொண்டு செல்வது பல வைரஸ் கிருமிகளை கொண்டு வந்து சேர்க்கும். தண்ணீர் பாட்டிலை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவுவது மிக முக்கியம்.

    * இருமல், சளி இருக்கும்போது அடுத்தவர் முகத்துக்கு நேரே இருமவோ, தும்மவோ செய்வது தவறு. எளிதாக அனைவருக்கும் நோயினை தானம் செய்து விடுகின்றீர்கள். கை குட்டை, டிஷ்யூ இவற்றினை பயன்படுத்துங்கள். இது நமது கடமையாகும்.



    * அதிக நேரம் ஷவரில், சுடுநீரில் நின்று கொண்டே இருக்காதீர்கள். உடலிலுள்ள இயற்கை எண்ணை பசையினை நீக்கி சருமத்தினை வறண்டு விடச் செய்யும். தோல் வயதானவர் போல் தோற்றமளிக்கும்.

    * சாப்பிட்டவுடன் பற்களை நன்கு சுத்தம் செய்யுங்கள். இது ஆரோக்கியம் மற்றும் நாகரீகமும் கூட. வைட்டமின் பி12 பற்றாக்குறை உள்ளதைக் கூறும் அறிகுறிகள். பொதுவில் சாதாரண மறதி. வெளிர்ந்த தோல் இவைகளை பி12 குறைபாடு என எளிதில் கூறி விடுவர்.

    வைட்டமின் பி- பிரிவில் 8 வகை உள்ளன. அவை அனைத்தும் உடலுக்கு உணவிலிருந்து சக்தி கிடைக்க உதவுபவை. ஞிழிகி, ஆரோக்கிய நரம்பு, ரத்த செல்கள் இவற்றுக்கு பி12 மிகவும் அவசியமானது. ரத்த சோகையினைத் தவிர்க்கின்றது. இதன் குறைபாடு காட்டும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

    * கை, பாதம் இவை மரத்து போவது, ஒருவித குறுகுறுப்பு உணர்வு இருப்பது, சிறு சிறு ஊசி குத்தல்கள் போல் உணர்வது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    * அடிக்கடி சோர்ந்து போவது, பலவீனமாக உணர்வது
    * வெளிரிய சருமம்
    * சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள்
    * நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள்
    * நெஞ்செரிச்சல் மருந்து அடிக்கடி எடுத்துக் கொள்பவர்கள்
    * அதிக மன உளைச்சல்
    * அதிக மறதி
    * வயது 50-க்கும் மேல்

    மருத்துவர் ரத்த பரிசோதனை மூலம் குறைபாட்டினை உறுதி செய்து அதற்கான சத்து மாத்திரைகளைத் தருவார். சுயமாக தானே எந்த மருந்து, சத்து மாத்திரையினையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதனை நினைவில் கொள்க.

    மேலும் காரணமின்றி முடி கொட்டுதல், இளநரை, வாயு புண் இவைகள் ஏற்படும் பொழுதும் வைட்டமின் பி12 பற்றி மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.
    வயது கூடும்பொழுது நமது உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளம் வயதில் இருந்த ஒரு வேகம் இருப்பதில்லை. பல உணவுகள் வயது கூடும்பொழுது ஒத்துக் கொள்வதில்லை. சிலரது வாழ்க்கை, உணவு முறை மாறுதல்களின் மூலம் வயது கூடும்பொழுது ஏற்படும் மாறுதல்களை குறைத்துக் கொள்ள முடியும்.

    * வயது கூடும்பொழுது பலருக்கு சர்க்கரை நோய் பிரிவு 2 தாக்குதல் எளிதில் ஏற்படுகின்றது. அனைவரும் அன்றாடம்? கப் அளவு பீன்ஸ், மொச்சை, பருப்பு வகைகள் இவைகளை சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்பு குறைவதுடன் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகின்றது.



    * வயது கூடும்பொழுது இருதயநோய் பாதிப்புகள் எளிதில் ஏற்படுகின்றது. ஒருவேளையாவது ஓட்ஸ் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு குறைய பெரிதும் உதவுகின்றது.

    * அந்த காலம் முதல் சிபாரிசு செய்யப்படும் ஆப்பிள் எந்த காலத்திலும் சிறந்த உணவு பொருளாகவே இருக்கும். இதிலுள்ள நார்சத்து கொலஸ்டிராலினை குறைக்கும். மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் என பல சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு அதிகம்.

    * பாதம், பிஸ்தா, ஆக்ரூட், முந்திரிகொட்டை வகைகள். இந்த கொட்டைகள் கலவை ஒரு அவுன்ஸ் அன்றாடம் எடுத்துக் கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றினை 28 சதவீதம் வரை குறைக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.

    சிறிதளவு வேர்கடலை கூட சிறந்ததுதான். எதையும் வறுத்து, பொரித்து, உப்பு போட்டு சாப்பிடுவது என்பது தீங்கே. ஆகவே சுவையினை இங்கு தவிர்த்து கைப்பிடி கலவை கொட்டைகளை அன்றாடம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    * மூளைக்கும் சக்தி வேண்டாமா? இங்குதான் கீரை வகைகளை முக்கியமாக குறிப்பிட வேண்டும். அடிக்கடி கீரை உணவினை சேர்த்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாட்டுத் திறன் சிறந்து விளங்குவதாக கூறப்படுகின்றது. இருப்பினும் ஏதேனும் உடல்நல பாதிப்பு இருந்தால் உணவு முறை, கீரைகளை உணவில் சேர்த்தல் இவைகளைப் பற்றி மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதனை கடைபிடிக்க வேண்டும்.

    * உங்கள் உடல் தசைகள் வலுவோடு இருக்க வேண்டுமா? உடலுக்கு தேவையான புரதம் கிடைக்க வேண்டும். பல பொருட்களை புரதம் கிடைக்க வேண்டி நாம் எடுத்துக் கொள்கிறோம். அதிக கொழுப்பு இல்லாத தயிர் ஒரு கப் அளவு அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இதில் உள்ள கால்சியம் நம் எலும்புகளின் ஆரோக்கியத்தினை காக்கும்.

    கேரட்: இது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் நலத்தினை அளிக்கக் கூடியது. கண்கள், வாய், சருமம், இருதயம் என சொல்லிக் கொண்டே போகலாம். கேரட் ரத்தக் கொதிப்பினைக் குறைக்கும். கெட்ட கொழுப்பினை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும். ஜீரண சக்திக்கு உதவும். இருதய நோய் பாதிப்புகளை குறைக்கும். புற்றுநோய் பாதிப்பினை வெகுவாக குறைக்கும்.

    இதில் உள்ள நார்சத்து, வைட்டமின்கள் ஏ, பி8, சி, ஈ., கே. மற்றும் தாது உப்புக்கள் இரும்பு, பொட்டாசியம், காப்பர், மக்னீஸ், பீட்டா கேரோட்டின் மற்றும் பல பிரிவான நோய் எதிர்ப்பு சக்தி இவை கேரட்டினை மிக முக்கியமான உணவாக்கி விடுகின்றது.

    பீட்ரூட்: கேரட் போன்ற மற்றொரு உணவு பீட்ரூட் புற்று நோயை தவிர்க்க, மறதி நீக்க, உயர் ரத்த அழுத்தம் குறைய என பீட்ரூட்டின் நன்மைகள் ஏராளம்.

    * அடர்ந்த சாக்லேட்டில் 70 சதவீதம் கோகோ இருப்பதால் தினமும் ஒரு துண்டு அடர்ந்த சாக்லேட் எடுத்துக் கொள்ளலாம்.

    மேற்கூறியவைகளை ஆரோக்கிய வாழ்வின் ஒரு பகுதி என்பதனை அறிந்து பின்பற்றுவோம்.
    அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். அல்சர் பிரச்சனை வரக்காரணத்தையும், வந்தால் தவிர்க்க, சேர்த்து கொள்ள வேண்டிவை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    உணவுப் பழக்கத்தையும், வாழ்வியல் முறையையும் அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனை அல்சர். வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், காலை உணவைச் சாப்பிடத் தவறுவதால், பலரும் வயிற்றுப் புண் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

    அல்சர் என்றால்...

    அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.

    * இரைப்பையில் ஏற்படுகின்ற புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனச் சொல்லலாம்.
    * உணவுப்பாதையில் ஏற்படுகின்ற புண்களை ஈசோபேகல் அல்சர் என வகைப்படுத்தப்படுகிறது.
    * சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களை டியோடனல் அல்சர் எனச் சொல்லலாம்.

    காரணங்கள் என்னென்ன?

    பாக்டீரியா தொற்று (Helicobacter pylori)
    மன உளைச்சல்
    அதீத கவலை
    தவறான உணவுப் பழக்கம்
    சில வகை மருந்துகளை உட்கொள்வது
    அதிகமாகக் காபி குடிப்பது
    மசாலா, கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவது  போன்ற பல்வேறு காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது.

    தவிர்க்க வேண்டிய உணவுகள் :

    * காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

    * காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.



    * பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது.

    * சோடா மற்றும் குளிர்பானங்களுக்கு முற்றிலுமாகத் தடைப்போடுங்கள். அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ளவர்கள், குடிப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பழக்கம் நோயைத் தீவிரமாக்கும். அதுமட்டுமல்ல வயிறு மற்றும் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வீக்கம்கூட உண்டாகலாம்.

    * ரெட் மீட்டை உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். அதனுடன் நோயின் வீரியத்தையும் அதிகப்படுத்தும்.

    சாப்பிட வேண்டிய உணவுகள்:


    * நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு 2 கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம்.

    * தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவர, சிறந்த பலன்களைப் பெறலாம்.

    * முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine), வயிற்றுப்புண்களை எதிர்க்கும் தன்மையுடையவை. இதனால் வயிற்றுப்புண்கள் வராமல் தடுக்கலாம்.

    * ஃபிரெஷ் திராட்சைப் பழங்களை ஜூஸாக செய்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம்.

    * கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் ஏலக்காய் ஒன்று, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர, நோய் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.

    * அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில், புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

    * வாரத்துக்கு மூன்று நாட்கள், ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது.

    * மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

    * பாசிப் பருப்பு சேர்த்து கீரைக் கூட்டு செய்து, ஒரு கப் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.

    * முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
    ×