search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hemorrhoids"

    • இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மூல நோய் வரும் வழியை பற்றி, தேரையர்' என்ற சித்தர், 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்று கூறியுள்ளார். வாயுவைப்பெருக்கக் கூடிய உணவுகள், காரமான உணவுகள், கிழங்கு வகைகள், உடல் சூடு, உட்கார்ந்த நிலையில் நெடுநேரம் இருப்பது, பசியை அடக்குதல், மலத்தை அடக்குதல் போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது. இதற்கான சித்த மருத்துவம் வருமாறு:-

    1) திரிபலா சூரணம் 1 கிராம். நாக பற்பம் 200 மிகி. நத்தை பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை நெய் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2) தேற்றான் கொட்டை லேகியம் 5 கிராம் வீதம், காலை. இரவு சாப்பிடலாம்.

    3) கருணைக்கிழங்கு லேகியம் 5 கிராம் வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    4) மூலக்குடார நெய் 5-10 மிலி வீதம் இரவு உணவுக்கு பின் எடுக்க வேண்டும்.

    5) மலச்சிக்கல் இருந்தால், நிலவாகைச் சூரணம் அல்லது. சிவதைச்சூரணம் 1 கிராம் வெந்நீரில் இரவு வேளை மட்டும்.

    மேற்கண்ட மருந்துகளில் உங்களுக்கு எது தேவை என்பதை சித்த மருத்துவர் முடிவு செய்து கொடுப்பார். எனவே சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுப்பது அவசியம்.

    6) துத்திக்கீரை சிறிதளவு, ஐந்து சின்ன வெங்காயம் இவைகளை விளக்கெண்ணெய் சிறிது விட்டு வதக்கி அரைத்து நெல்லிக்காய் அளவு இரவு வேளை சாப்பிட்டு வர மூலவலி மற்றும் முளை குறைந்து கொண்டு வரும்.

    உணவுப் பழக்கவழக்கங்கள்:

    நார்ச்சத்து அதிகம் நிறைந்த அவரைப் பிஞ்சு, பீன்ஸ் பிஞ்சு, கோவைக்காய். பூசணிக்காய், முள்ளங்கி, புடலங்காய், முட்டைக் கோஸ், கிழங்கு வகையில் கருணைக்கிழங்கு. கீரைகளில் துத்திக்கீரை, அறுகீரை. தண்டுக் கீரை, புளியாரைக் கீரை, பசலைக்கீரை சாப்பிடலாம்.

    பிரண்டைத் தண்டுடன், புளி, உப்பு. மிளகு, சீரகம், பெருங்காயம் இவை சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் மூலமுளை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பழங்களில் முலாம் பழம், அத்திப்பழம், மாதுளம் பழம், வாழைப்பழம், ஆப்பிள் நல்லது.

    நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல், பெருங்காயம், இந்துப்பு, ஓமம், சீரகம், கொத்தமல்லி இவைகளை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைத்து, சாதத்தில் நெய் விட்டு சாப்பிட குணம் கிடைக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்வது மிகச் சிறந்தது.

    டீ. காபி அடிக்கடி குடிப்பதையும், இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள், மாவுப்பண்டங்கள், எண்ணெய் பலகாரங்கள். கோழிக்கறி போன்றவற்றை அளவுடன் எடுப்பது நல்லது. தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    • வாழ்வியல் முறைகள் மூலத்திற்கு முக்கிய காரணம்.
    • மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும்.

    மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 50சதவீத மக்கள் தங்கள் வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் மூல நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதில் 5 சதவீதம் பேர் நிரந்தரமாக மூலநோய் பாதிப்பை பெற்றிருக்கிறார்கள் என தேசிய மருத்துவ நூலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

    ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய்கள் இருக்கும். மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும். அப்போதுதான் மூலம் உருவாகும். நார்ச்சத்து குறைவு, குறைவாக தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் தான் இந்த நோய் உருவாகிறது.

    சிகிச்சை முறை

    பொதுவாக மூலத்தில் 4 வகை உண்டு. அதுபோன்று அறுவை சிகிச்சை முறையிலும் 4 வகை இருக்கிறது. முதல் வகை - கத்தி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் (ஒப்பன் சர்ஜரி) முறை. இதில் வலி அதிகமாக இருக்கும். 2-வது முறையில் கத்திக்கு பதிலாக கருவிகள் உதவியுடன் மூலம் வெட்டி எடுக்கப்படும். இதிலும் வலி இருக்கும்.

    3-வது லேசர் சிகிச்சை முறை. மூலத்தில் 2 மற்றும் 3-வது வகை இருப்பவர்களுக்கும், வலி இருப்பவர்கள் மற்றும் ரத்தக் கசிவு உள்ளவர்கள், மருந்து கொடுத்தும் சரியாகாதவர்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சையின் போது ரத்தக்கசிவு வலி இருக்காது. காலையில் வந்து சிகிச்சை பெற்று விட்டு மாலையில் வீடு திரும்பிவிடலாம்.

    மூலத்தில் 4-வது வகை இருக்கிறது. இந்த வகைக்கு சிகிச்சை அளிக்க 'ஸ்டேபிலர்' என்று சொல்லக்கூடிய அதிநவீன கருவி உள்ளது. அந்தக்கருவியை பயன்படுத்தி மூலத்தை அகற்றிவிடலாம். காலையில் வந்தால் அறுவை சிகிச்சை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடவாம். ரத்தக்கசிவு, வலி இருக்காது. தையலும் தேவையில்லை.

    மூலத்துக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் வழி இல்லை. எந்த வகையான மூலம் இருக்கிறது என்று பரிசோதனை செய்து கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    • துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும்.
    • கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.

    மூலவியாதியை விரட்டும்

    துளசியை கொண்டும் பாயாசம் செய்ய முடியும். இதை செய்யும் முறை மிகவும் எளிதானது. சித்த மருத்துவ கடைகளிலும், துளசி தோட்டங்களிலும் துளசி விதை தாராளமாக கிடைக்கும். இதில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டு அந்த அளவில் மூன்று மடங்கு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு (மண் சட்டி என்றால் மிகவும் நல்லது) கால் படி தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்தால் பாயாசம் போல் இருக்கும். இதை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு நோய் சரியாகும். மூல வியாதி உள்ளவர்களுக்கு இது ஒரு கண்கண்ட மருந்து. இந்த பாயாசத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    உடல் பருமன் குறைக்கும் துளசி

    துளசி இலை சாறை சூடாக்கி எட்டில் ஒரு பங்கு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். இதனை ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். பெண்கள் மாதவிடாயின் போது துளசி விதைகளை ஒரு ஸ்பூன் நீருடன் அரைத்து அந்த மூன்று நாட்கள் உட்கொண்டால் கருப்பை சுத்தமாகி புத்திர பாக்கியம் கிட்டும்.

    சிறுநீரகக்கற்கள் நீங்கும்

    துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்கள் படிப்படியாக கரையும். இவ் வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷ நீர் கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

    பெண்களுக்கு...

    துளசி இலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக் கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறிய பின் பத்திரப் படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக் கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந் தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (ரத்தப் போக்கு) குணமாகும்.

    நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிக காரம், மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மூலநோய் வருகிறது.

    நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்டநாள் வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த் தொற்றுகள், அதிக காரம், மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது போன்ற காரணங்களால் மலக்குடல் அழுத்தத்திற்கு ஆளாகி மூலநோய் வருகிறது.

    மூல நோயின் அறிகுறிகள்?

    ஆசன வாயில் அரிப்பு ஏற்படுதல், வலியுடன் மலம் கழித்தல், மலத்துடன் இரத்தம் கலந்து வருதல், மலம் கழிக்கும் போதும், கழித்த பிறகும் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி எற்படுதல், ஆசன வாய்ப்பகுதியில் பட்டாணி அளவிற்கோ அல்லது அதற்கு மேலோ மலக்குடல், முளை போல் வெளித்தள்ளுதல் போன்றவையே.

    மூலநோய் வராமல் தடுக்கும் வழிகள்?

    மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் முடிந்த அளவு சீக்கிரமாக மலம் கழித்து விட வேண்டும். அதிகபடியான காரம், மசாலா உணவுகளை சாப்பிடக்கூடாது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
    ×