search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thean Kotai Lehiyam"

    • இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மூல நோய் வரும் வழியை பற்றி, தேரையர்' என்ற சித்தர், 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்று கூறியுள்ளார். வாயுவைப்பெருக்கக் கூடிய உணவுகள், காரமான உணவுகள், கிழங்கு வகைகள், உடல் சூடு, உட்கார்ந்த நிலையில் நெடுநேரம் இருப்பது, பசியை அடக்குதல், மலத்தை அடக்குதல் போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது. இதற்கான சித்த மருத்துவம் வருமாறு:-

    1) திரிபலா சூரணம் 1 கிராம். நாக பற்பம் 200 மிகி. நத்தை பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை நெய் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2) தேற்றான் கொட்டை லேகியம் 5 கிராம் வீதம், காலை. இரவு சாப்பிடலாம்.

    3) கருணைக்கிழங்கு லேகியம் 5 கிராம் வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    4) மூலக்குடார நெய் 5-10 மிலி வீதம் இரவு உணவுக்கு பின் எடுக்க வேண்டும்.

    5) மலச்சிக்கல் இருந்தால், நிலவாகைச் சூரணம் அல்லது. சிவதைச்சூரணம் 1 கிராம் வெந்நீரில் இரவு வேளை மட்டும்.

    மேற்கண்ட மருந்துகளில் உங்களுக்கு எது தேவை என்பதை சித்த மருத்துவர் முடிவு செய்து கொடுப்பார். எனவே சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுப்பது அவசியம்.

    6) துத்திக்கீரை சிறிதளவு, ஐந்து சின்ன வெங்காயம் இவைகளை விளக்கெண்ணெய் சிறிது விட்டு வதக்கி அரைத்து நெல்லிக்காய் அளவு இரவு வேளை சாப்பிட்டு வர மூலவலி மற்றும் முளை குறைந்து கொண்டு வரும்.

    உணவுப் பழக்கவழக்கங்கள்:

    நார்ச்சத்து அதிகம் நிறைந்த அவரைப் பிஞ்சு, பீன்ஸ் பிஞ்சு, கோவைக்காய். பூசணிக்காய், முள்ளங்கி, புடலங்காய், முட்டைக் கோஸ், கிழங்கு வகையில் கருணைக்கிழங்கு. கீரைகளில் துத்திக்கீரை, அறுகீரை. தண்டுக் கீரை, புளியாரைக் கீரை, பசலைக்கீரை சாப்பிடலாம்.

    பிரண்டைத் தண்டுடன், புளி, உப்பு. மிளகு, சீரகம், பெருங்காயம் இவை சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் மூலமுளை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பழங்களில் முலாம் பழம், அத்திப்பழம், மாதுளம் பழம், வாழைப்பழம், ஆப்பிள் நல்லது.

    நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல், பெருங்காயம், இந்துப்பு, ஓமம், சீரகம், கொத்தமல்லி இவைகளை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைத்து, சாதத்தில் நெய் விட்டு சாப்பிட குணம் கிடைக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்வது மிகச் சிறந்தது.

    டீ. காபி அடிக்கடி குடிப்பதையும், இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள், மாவுப்பண்டங்கள், எண்ணெய் பலகாரங்கள். கோழிக்கறி போன்றவற்றை அளவுடன் எடுப்பது நல்லது. தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    ×