search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    மூலநோயை லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்தமுடியுமா?
    X

    மூலநோயை லேசர் சிகிச்சை மூலம் குணப்படுத்தமுடியுமா?

    • வாழ்வியல் முறைகள் மூலத்திற்கு முக்கிய காரணம்.
    • மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும்.

    மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 50சதவீத மக்கள் தங்கள் வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் மூல நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதில் 5 சதவீதம் பேர் நிரந்தரமாக மூலநோய் பாதிப்பை பெற்றிருக்கிறார்கள் என தேசிய மருத்துவ நூலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

    ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய்கள் இருக்கும். மலச்சிக்கல் வரும்போது ஆசன வாயில் அழுத்தம் ஏற்படும். அப்போதுதான் மூலம் உருவாகும். நார்ச்சத்து குறைவு, குறைவாக தண்ணீர் குடிப்பது போன்றவற்றால் தான் இந்த நோய் உருவாகிறது.

    சிகிச்சை முறை

    பொதுவாக மூலத்தில் 4 வகை உண்டு. அதுபோன்று அறுவை சிகிச்சை முறையிலும் 4 வகை இருக்கிறது. முதல் வகை - கத்தி மூலம் அறுவை சிகிச்சை செய்யும் (ஒப்பன் சர்ஜரி) முறை. இதில் வலி அதிகமாக இருக்கும். 2-வது முறையில் கத்திக்கு பதிலாக கருவிகள் உதவியுடன் மூலம் வெட்டி எடுக்கப்படும். இதிலும் வலி இருக்கும்.

    3-வது லேசர் சிகிச்சை முறை. மூலத்தில் 2 மற்றும் 3-வது வகை இருப்பவர்களுக்கும், வலி இருப்பவர்கள் மற்றும் ரத்தக் கசிவு உள்ளவர்கள், மருந்து கொடுத்தும் சரியாகாதவர்களுக்கு லேசர் முறையில் சிகிச்சை செய்யப்படும். இந்த சிகிச்சையின் போது ரத்தக்கசிவு வலி இருக்காது. காலையில் வந்து சிகிச்சை பெற்று விட்டு மாலையில் வீடு திரும்பிவிடலாம்.

    மூலத்தில் 4-வது வகை இருக்கிறது. இந்த வகைக்கு சிகிச்சை அளிக்க 'ஸ்டேபிலர்' என்று சொல்லக்கூடிய அதிநவீன கருவி உள்ளது. அந்தக்கருவியை பயன்படுத்தி மூலத்தை அகற்றிவிடலாம். காலையில் வந்தால் அறுவை சிகிச்சை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடவாம். ரத்தக்கசிவு, வலி இருக்காது. தையலும் தேவையில்லை.

    மூலத்துக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் வழி இல்லை. எந்த வகையான மூலம் இருக்கிறது என்று பரிசோதனை செய்து கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    Next Story
    ×