search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "preservatives"

    • 7 மடங்கு அதிகமான சத்தத்தை விலங்குகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    • குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

    ஒளிரும் பட்டாககளும், அவை எழுப்பும் சத்தங்களும் பண்டிகையை உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாட வழிவகுக்கும். அதேநேரம் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பட்டாசுகளின் திடீர் வெளிச்சமும், அதிர வைக்கும் சத்தமும் அச்சுறுத்தலாகவே அமையும்.

    பட்டாசுகள் வெடிக்கும்போது நாம் கேட்பதை விட, 7 மடங்கு அதிகமான சத்தத்தை செல்லப் பிராணிகள் உணர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய திடீர் சத்தங்கள் அவற்றின் உயிருக்கே ஆபத்தாகவும் மாற வாய்ப்பு உள்ளது. தீபாவளியின் போது பட்டாசு சத்தத்தில் இருந்து உங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க சில குறிப்புகள்.

    தீபாவளி பண்டிகை அன்று அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கும் நேரத்துக்கு முன்பாகவே, உங்கள் செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இதனால் வெடிகளின் பயத்தில் இருந்து அவை தப்பிக்க முடியும். அதேபோல பட்டாசு சத்தத்துக்கு உங்கள் செல்லப்பிராணி அதிகமாக பயப்படும் என்று நீங்கள் எண்ணினால், முன்னதாகவே கால்நடை மருத்துவரை அணுகி அதன் பதற்றத்தை குறைப்பதற்கான மருத்துகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

    தீபாவளி அன்று ஏற்றிவைக்கும் தீபங்கள் மற்றும் அலங்கார மெழுகுவர்த்திகளை, செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களுக்கு அருகில் வைப்பதை தவிர்க்கவும். பட்டாசு சத்தத்துக்கு பயந்து உங்கள் செல்லப்பிராணி சோபா, கட்டில் போன்றவற்றுக்கு அடியில் ஒளிந்துகொள்ள நேரிடலாம். அத்தகைய சமயங்களில் அவற்றை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியே இழுத்து வருவதைத் தவிர்க்கவும். அவை அந்த சூழ்நிலையை இயல்பாக கையாள்வதற்கு உதவி செய்யவும்.

    பலரும் மொட்டை மாடிகளில் கூண்டு அமைத்து முயல்களை வளர்க்கிறார்கள். தீபாவளி பண்டிகை சமயத்தில் மட்டும் வீட்டுக்குள்ளேயே அவற்றுக்கு பாதுகாப்பான முறையில் கூண்டுகள் அமைத்து பராமரிக்கலாம்.

    பட்டாசு சத்தத்தால் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுவதை உங்களது குழந்தைகளுக்கு தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இது வருங்காலத்தில் விலங்குகளின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

    • ராமநாதபுரம் மாவட்ட உப்பளங்களில் விளைந்த உப்புகள் தார்ப்பாயால் மூடி பாதுகாக்கப்பட்டது.
    • இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி நடைபெறும்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம், திருப்புல்லாணி, ஆணைகுடி, காஞ்சிரங்குடி, நதிப்பாலம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பள பாத்திகளில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக உப்பள பாத்திகள் முழுவதும் நீரில் மூழ்கி போனது. இதனால் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    கோடை காலத்தில் அதிகப்படியாக விளைந்த உப்பை பாத்திகளின் ஓரம் கொட்டி தார்ப்பாயால் பாதுகாத்து வருகின்றனர். உணவிற்கான உப்பு, ரசாயனம் மற்றும் உர தொழிற்சாலைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு, சரக்கு லாரிகள் மூலம் தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    பாத்திகள் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை நம்பி வாழும் ஏராளமான தொழி லாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து மாற்று தொழிலை தேடி வருகின்றனர்.

    ×