பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள்
Published on

மதுரை

பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் முழுவதும் வசித்துவரும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

எனவே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

சென்னையில் மதுரைக்கு 280 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது தவிர திருச்சிக்கு 135, திருப்பூ ருக்கு 80, கோவைக்கு 120, நெல்லைக்கு 35, நாகர்கோவி லுக்கு 35, திருச்செந்தூருக்கு 30, மற்றவை 175 உள்பட 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பொது உள்ளது.

இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.

பயணிகளுக்கு வழிகாட்ட வும், சிறப்பு பஸ்களை கண்காணிக்கவும், முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அலு வலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயண சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com