search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கட்டுமான பொருட்கள் திருட்டு  சேலம் மாநகராட்சி பெண் கவுன்சிலர் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
    X

    அரசு கட்டுமான பொருட்கள் திருட்டு சேலம் மாநகராட்சி பெண் கவுன்சிலர் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

    • எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
    • இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதை தட்டிக்கேட்டபோது ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    சேலம்:

    சேலம் குகையில் உள்ள ஆண்டிப்பட்டி ஏரி கார்கில் நகரில் சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நவமணி மற்றும் ஊர் மக்கள் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.

    இந்த நிலையில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு அரசு குடிசை மாற்றுவாரியத்தின் எல்ஐ.ஜி அடுக்குமாடி பகுதிக்கு கார்கில் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். அந்த பெயரில் தான் மத்திய அரசின் தபால் தொடர்புகளும் உள்ளன.

    இது குறித்து, கார்கில் நகர் பகுதி என அறிமுகப்படுத்தும் 4 பெயர் பலகையும் நிறுவினோம். இதற்கு தேவையான ஜல்லி கற்கள் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை அருகில் குடிசைமாற்று வாரியத்தின் ஒப்பந்ததாரர் குவித்து வைத்திருந்தார்.

    இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதற்கு உடந்தையாக கவுன்சிலர் புனிதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த வி.எம்.துரை, இவரது தங்கை தாமரைச்செல்வி ஆகியோர் இருக்கின்றனர். இதை தட்டிக்கேட்டபோது என்னையும், ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கவுன்சிலர் மீது வழக்கு

    இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி, சுதந்திரம், கவுன்சிலர் புனிதா, வி.எம்.துரை, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் மீது 294 (பி), 506(1), ஐ.பி.சி.379 போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×