search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crowds"

    • வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சாவூர் செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை ( வியாழக்கிழமை ) நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1 வல்லம் ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, சுள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலக ங்களைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரித்த பொருட்களை காட்சிபடுத்தினர்.
    • வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர், தமிழ்நாடு மாநில வாழ்வாதார குழு இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் செய்வோர் மற்றும் விற்பனையாளர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய துணை வட்டாட்சியர் அண்ணா துரை தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்றுனர் பாலகணேஷ் சுகந்தி, தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்தி, துணை வட்டார அலுவலர் பக்கிரிசாமி, வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், வட்டார மகளிர் சுயஉதவி குழுஒருங்கிணை ப்பாள ர்கள் மேனகா, அருள்மேரி, ஜெயமாலினி சுமித்ரா, மணிபாரதி உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிபடு த்தினர்.

    இதுகுறித்து மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி கூறுகையில்:-

    வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. அவற்றில் 1400 குழுக்களுக்கு சுமார் ரூ.3 கோடி நிதி வழங்கப்பட்டு சிறுதானிய பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர்.

    • சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.
    • விநாயகர் சிலைகளை பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களின் அருகே வைக்கக்கூடாது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

    சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், நிலைய எழுந்தர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.

    இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி செந்தில் குமார், சம்பத்,சண்முகம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொ ண்டனர்.

    கூட்டத்தில் இன்ஸ்பெ க்டர் சிவக்குமார் பேசுகை யில், விநாயகர் சிலையை புதிய இடத்தில் வைக்க கூடாது.

    கடந்த வருடம் வைத்த இடத்திலேயே வைக்க வேண்டும்.

    சிலைகள் 6 அடிக்கு குறைவாக இருக்க வேண்டும்.

    விநாயகர் சிலை களை பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களின் அருகே வைக்கக்கூடாது.

    விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு தினமே சிலைகளை கரைக்க வேண்டும்.

    ஊர்வலத்தின் போது ஜாதி மதம் சார்ந்த கோஷங்களை பாடல்களை பயன்படுத்தக் கூடாது.

    எளிதில் தீப்பிடிக்கும் கொட்டகைகளில் சிலைகளை வைக்கக்கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பேசினார்.

    இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முத்து, முருகானந்தம், ஹரி, கமல், கண்ணன், குருசாமி உள்ளிட்ட ஏராளமா னவர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் 21 -ந்தேதி கலெக்டர் தலைமையில் நடைபெறும்.
    • விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    ஜூலை 2023 -ம் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற 21 -ந்தேதி (வெள்ளிக் கிழமை) கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் கிசான் கடன் அட்டையுடன் காலை 8மணிமுதல் 10 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரியபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது
    • குறைகளை தெரிவித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி மாலை 4.30 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்-அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள், தொழிலாளர் நல ஆய்வாளர் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, மதுைர மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருமருகல் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயபால் சங்கர் தலைமை வகித்தார்.

    செயலாளர் காமராஜ், துணைத் தலைவர் காசி அறிவழகன், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் ரஞ்சித் வரவேற்றார்.

    கூட்டத்தில் திருமருகல் கடைவீதியில் சங்கத்தின் பெயர் பலகை வைக்க வேண்டும், அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்,

    விபத்துக்கள் நடை பெறாமல் இருக்க திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் சங்க நிர்வாகி ஹரிஹரன் நன்றி கூறினார்.

    • மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
    • இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்குழுவின் தலைவரும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரு மான குமரன் தலைமை தாங்கினார். மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநர் ராஜசேகரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், பல்வேறு மாவட்ட அதிகாரிகள், அமைப்பு நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் வெளிமாநில தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் மற்றும் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். மதுரை மண்டலத்தில் 8 மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொழிலாளர் துறையிலும் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை தொழிகை பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறையின் வெப் போர்ட்டலிலும்

    (labour.in.gov.in/ism) பதிவேற்றம் செய்து அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது.

    மேலும் அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை தொழிவாளர் உதவி ஆணையர்கள் வெப் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது. வெளிமாநில தொழிலா ளர்களுக்கு ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, பணியிட விபத்துகள் ஏதும் ஏற்படின் உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன். அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல கோரப்பட்டது.

    அதனை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் சட்ட உரிமைகள் குறித்து மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநரும், விபத்து மரண இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    தொழிலாளர்களின் பணிநிலைமை, குறைந்தபட்ச ஊதியம், குழந்தைகளின் கல்வி மற்றும் விபத்து நேர்ந்தால் வழங்கப்படும் இழப்பீடு போன்ற விவரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். மேலும் பணியிடத்தில் சரியான பணி நிலைமை, குறைந்த பட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, குடும்பத்துடன் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி போன்றவை வேலையளிப்பவரால் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறும், ஏதும் குறைபாடுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து தீர்வுகாணுமாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • பசுமை காலநிலை நடவடிக்கை குழு அமைப்பதற்கான கூட்டம் கீழக்கரையில் நடந்தது.
    • குறுங்காடு சிறப்பாக வளர்க்கும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழக்கரை

    பசுமைத் தாயகத்தின் சார்பில் பசுமை காலநிலை நடவடிக்கை குழு அமைப்பதற்கான கூட்டம் கீழக்கரையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் கர்ண மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருஞானம் முன்னிலை வகித்தார். பா.ம.க. மாவட்ட செயலாளர் அக்கிம், மாவட்ட தலைவர் சந்தன தாஸ், அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் பேசினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும், அனைத்து ஊரணிகளில் வைகை நீரை கொண்டு வந்து நீர் நிலைகளை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, பசுமை தாயகத்தின் மாவட்டத் துணை தலைவர் புஷ்பராஜ், துணைச்செயலாளர் பசும்பொன் ரமேஷ், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், தலைவர் சரீப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர். குறுங்காடு சிறப்பாக வளர்க்கும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.
    • சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும், சனி, ஞாயிறு, மே தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக ஏற்காட்டில் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதால், இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஏற்காட்டிற்கு வர தொடங்கினர். ஏற்காட்டின் ரம்மியமான சூழலையும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும், சிலு சிலு காற்றையும் அவர்கள் அனுபவித்து மகிழந்தனர். மேலும் இங்குள்ள பூங்காக்களை கண்டுகளித்தும், ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்து குதூகலித்தனர்.

    வெயிலின் தாக்கமில்லாமல் நிலவும் அருமையான காலநிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ரோஜா தோட்டத்தில் பூத்துள்ள வண்ண மலர்களையும், அண்ணா பூங்காவில் உள்ள வண்ணமயமான மலர்களையும், லேடிசீட், பக்கோடா பாயின்ட் போன்ற காட்சி முனைகளுக்கும் சென்று இயற்கையின் அழகை ரசித்தனர். சேர்வராயன் கோவில், ஐந்திணை பூங்கா, பீக்கு பார்க் போன்ற இடங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    அதிகமான சுற்றுலா பயணிகளிள் வருகையால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தது. சிலர் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல், இரவு முழுவதும் காரில் தங்கும் நிலையும் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், ஏற்காடு களை கட்டியுள்ளது.

    • தஞ்சையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.
    • மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    இதற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார்.

    இதில் தஞ்சை தெற்குவீதி, வடக்குவீதி, மேலவீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ்கார்னர், அருளானந்தநகர், பர்மா காலனி, நிர்மலாநகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜிசாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான்நகர், ரெட்டிப்பா ளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப்பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ்நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்களில் 4 பெண்களிடம் 19 பவுன் நகை அபேஸ் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    • டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், வேலைக்கு செல் ேவார் பயணிப்பதால் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகரில் டவுன் பஸ்களில் ஏறும் சமூக விரோதிகள் நகை மற்றும் பணத்தை நைசாக திருடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் சில பெண்களும் ஈடுபட்டு ள்ளனர்.

    பஸ்சில் அருகில் நிற்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சக பயணிகளுடன் கலந்து நிற்கும் கொள்ளை கும்பல் பயணிகள் அசந்த நேரத்தில் பணம்-நகையை திருடிச் செல்கின்றனர்.

    மதுரை நகரில் குறிப்பிட்ட வழித்தடங்க ளில் 4 பெண்கள், 19 பவுன் நகையை பறிகொடுத்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கற்பகவள்ளி (வயது 25). சம்பவத்தன்று மாலை இவர் மண்டேலா நகரில் இருந்து அரசு பஸ்சில் பழங்காநத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் கற்பகவள்ளி வைத்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, ரூ.400 ஆகியவற்றை திருடிச் சென்றார்.

    மதுரை பழங்காநத்தம், மேலத்தெருவை சேர்ந்த பெரியசாமி மனைவி ஜோதிமணி (52). சம்பவத் தன்று காலை இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வசந்த நகருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்மநபர், ஜோதிமணி அணிந்திருந்த 6 பவுன் நகையை கூட்ட நெரிசலை பயன்படுத்தி நைசாக பறித்துச்சென்றார்.

    பழங்காநத்தம், பொட்டூரணி தெருவை சேர்ந்த பரமசிவம் மனைவி லோகாமணி (50). இவர் சம்பவத்தன்று மதியம் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள வங்கிக்கு சென்றார். அதன் பிறகு பைக்காராவுக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது மர்ம நபர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 3 பவுன் நகையை திருடிச் சென்றார்.

    மதுரை திருப்பரங்கு ன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் மனைவி பிறைகன்னி (55). இவர் சம்பவத்தன்று மதியம் ஆண்டாள்புரம் பஸ் நிலையத்தில் இருந்து அழகப்பன் நகருக்கு அரசு பஸ்சில் சென்றார்.

    அப்போது மர்ம நபர் பிறைகண்ணி கொண்டு வந்திருந்த பையில் இருந்த 6 பவுன் தங்க வளையல், 2 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை திருடிச் சென்றார்.

    மேற்கண்ட 4 சம்பவங்களும் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. எனவே போலீசார் துரிதமாக செயல்பட்டு பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டும் கும்பலை பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

    • தீபாவளிபண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டுவார்கள்.
    • லாரன்ஸ்ரோடு பகுதியில் உயர்கோபுரம் அமைத்து போக்குவரத்து மற்றும் கொள்ளையர்களை கண்காணித்தபடி உள்ளனர்.

    கடலூர்:

    தீப திருநாளாம் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (24-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட மக்கள் தீபாவளி புத்தாடை வாங்குவதற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். கடலூர் மாவட்டம் கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியாகும். இந்த கிராம மக்கள் எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் கடலூர் துறைமுகம் மற்றும் திருப்பாதிரிபுலியூர்தான் வரவேண்டும். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் கடலூர் மாவட்ட கிராம மக்கள் திருப்பாதிரிபுலியூருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கடலூர் லாரன்ஸ்ரோடு, இம்பீரியல் சாலை, சுப்புராயலுசெட்டி தெரு, நகை கடை வீதிகளில் படையெடுக்கிறார்கள். இதனால் கடலூர் நகர் பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியவண்ணம் உள்ளது. இதன் காரணமாக இம்பீரியல் சாலை, மஞ்சக்குப்பம்மணிக்கூண்டு, நேதாஜி சாலை மற்றும் முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. நேரம் ஆக ஆக மக்கள் அதிகளவில் குவிவதால் இம்பீரியயல் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

    தீபாவளிபண்டிகை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டுவார்கள். இதனை கண்காணிக்க கடலூர் மாவட்டத்தில் 1,600 போலீசார் ரோந்து வருகிறார்கள். அதோடு டிரோன் காமிரா மூலமும் திருடர்கள், செல்ேபான் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர். இது தவிர போலீஸ் டி.எஸ்.பி. கரிக்கால்பாரிசங்கர் தலைமையில் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மேற்பார்வையில் லாரன்ஸ்ரோடு பகுதியில் உயர்கோபுரம் அமைத்து போக்குவரத்து மற்றும் கொள்ளையர்களை கண்காணித்தபடி உள்ளனர். மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை ஓர வியாபாரிகளும் துணிகளை விற்பனை செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் துணிரகங்களை வாங்குவதற்கு கிராமமக்கள் ஒட்டு மொத்தமாக குவிவதால் கடலூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. 

    ×