எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது குறைகளை தெரிவித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை

மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி மாலை 4.30 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்-அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள், தொழிலாளர் நல ஆய்வாளர் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, மதுைர மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com