search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
    X

    தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

    வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

    • மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
    • இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான வெளிமாநில தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்குழுவின் தலைவரும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையரு மான குமரன் தலைமை தாங்கினார். மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநர் ராஜசேகரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், பல்வேறு மாவட்ட அதிகாரிகள், அமைப்பு நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் வெளிமாநில தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் மற்றும் அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். மதுரை மண்டலத்தில் 8 மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், மருத்துவமனைகள், சினிமா தியேட்டர்கள், அழகு நிலையங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தொழிலாளர் துறையிலும் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை தொழிகை பாதுகாப்பு மற்றும் சுகாதாரதுறையின் வெப் போர்ட்டலிலும்

    (labour.in.gov.in/ism) பதிவேற்றம் செய்து அனைத்து வெளிமாநில தொழிலாளர்களையும் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது.

    மேலும் அமைப்புசாரா தொழில்களில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை தொழிவாளர் உதவி ஆணையர்கள் வெப் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய கோரப்பட்டது. வெளிமாநில தொழிலா ளர்களுக்கு ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, பணியிட விபத்துகள் ஏதும் ஏற்படின் உடனுக்குடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன். அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல கோரப்பட்டது.

    அதனை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்கள் சட்ட உரிமைகள் குறித்து மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக கூடுதல் இயக்குநரும், விபத்து மரண இழப்பீடு குறித்து மதுரை தொழிலாளர் இணை ஆணையரும் எடுத்துக்கூறினர்.

    தொழிலாளர்களின் பணிநிலைமை, குறைந்தபட்ச ஊதியம், குழந்தைகளின் கல்வி மற்றும் விபத்து நேர்ந்தால் வழங்கப்படும் இழப்பீடு போன்ற விவரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர். மேலும் பணியிடத்தில் சரியான பணி நிலைமை, குறைந்த பட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, குடும்பத்துடன் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி போன்றவை வேலையளிப்பவரால் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறும், ஏதும் குறைபாடுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து தீர்வுகாணுமாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×