search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யத்தில், மகளிர் சுய உதவிக்குழு கூட்டம்
    X

    காட்சிபடுத்தப்பட்டிருந்த பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    வேதாரண்யத்தில், மகளிர் சுய உதவிக்குழு கூட்டம்

    • 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரித்த பொருட்களை காட்சிபடுத்தினர்.
    • வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர், தமிழ்நாடு மாநில வாழ்வாதார குழு இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருட்கள் செய்வோர் மற்றும் விற்பனையாளர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய துணை வட்டாட்சியர் அண்ணா துரை தலைமை தாங்கினார். முன்னதாக மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்றுனர் பாலகணேஷ் சுகந்தி, தலைமையாசிரியர் தெட்சணாமூர்த்தி, துணை வட்டார அலுவலர் பக்கிரிசாமி, வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன், வட்டார மகளிர் சுயஉதவி குழுஒருங்கிணை ப்பாள ர்கள் மேனகா, அருள்மேரி, ஜெயமாலினி சுமித்ரா, மணிபாரதி உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழுவினர் தாங்கள் தயாரித்த பொருட்களை காட்சிபடு த்தினர்.

    இதுகுறித்து மகளிர் சுயஉதவி குழு வட்டார இயக்க மேலாளர் அன்பு ரோஸ் மேரி கூறுகையில்:-

    வேதாரண்யம் ஒன்றியத்தில் 1603 மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. அவற்றில் 1400 குழுக்களுக்கு சுமார் ரூ.3 கோடி நிதி வழங்கப்பட்டு சிறுதானிய பொருட்களை கொண்டு உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி உள்ளனர்.

    Next Story
    ×