search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தத்தால் பயணிகள்- மாணவர்கள் அவதி
    X

    பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாத சாலை.

    நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தத்தால் பயணிகள்- மாணவர்கள் அவதி

    • அபிராமம் அருகே நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தத்தால் பயணிகள்- மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
    • பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பொட்டகுளம் கிராம மக்களும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் வெளியூர் செல்லவேண்டும் என்றால் அபிராமம் - பார்த்திபனூர் செல்லும் மெயின் ரோட்டுக்கு வந்து பஸ் ஏற வேண்டும்.

    பொட்டகுளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாண விகள் அவதிப்படுகின்றனர்.

    இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொட்ட குளம் கிராம மக்க கூறுகையில், எங்கள் ஊரிலிருந்து பஸ் நிறுத்தம் இருக்கும் மெயின் ரோட்டுக்கு 5.கி.மீ தூரம் நடந்தே வரவேண்டி உள்ளது.

    அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் படிப்பதற்கும், வெளியூர் செல்லவும் சிரமப்படுகிறோம்.இந்த பஸ் நிறுத்த்தில் மழையிலும், வெயிலிலும் நிற்க முடியாமல் வயதா னவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    இந்த பஸ் நிறுத்தத்திற்காக 30 ஆண்டுகளாக நிழற்குடை கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×