search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pit"

    தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் - நெல்லிக்குப் பம் சாலை அரசு ஆஸ்பத்திரி எதிரில் பாதாள சாக்கடை உள்ளது. இங்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இத னால் இவ்வழியில் செல்லும் வாகனங்கள் சாலை ஓர மாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளத்தில் தற்போது திடீரென்று மரக்கிளை வைக்கப்பட்டு, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளது

    கடலூர் - நெல்லிக்குப்பம் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், தொடர் மழை பெய்து வரும் காரணத்தி னால் தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.ஆகையால் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் கால தாமதம் இன்றி உடனடியாக திடீரென்று ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் மயானம் அருகே செல்லும் நடுரோட்டில் ஏற்பட்ட சிறிய குழியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் முன்னா ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் உள்ளிருக்கும் அனைத்து கேபிள்களும் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிைலயில் காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஆதினங்குடியிலிருந்து கணபதிபுரம் வரை செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

    இந்த சாலையை ஆதினங்குடி,பண்டாரவடை, இடையாத்தங்குடி, தென்பிடாகை, கிடாமங்கலம், ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடும் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

    மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியே சென்று வருகின்றன.

    மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்ல இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றன.

    இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சாலையில் மின் வசதி இல்லாத காரணத்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது
    • தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி யில் மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    பவானி,

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து கோபி, கவுந்தப்பாடி வழி யாக செல்லும் சாலையில் பச்சப்பாளி பஸ் ஸ்டாப் அருகே உள்ள வாய்க்கால் மேடு உள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் பள்ளத்தில் கவுந்த ப்பாடியில் இருந்து சித்தோடு நோக்கி வந்து கொண்டு இருந்த சித்தோடு, தாய்நகர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி வெங்கடேசன் (52) நிலை தடுமாறி தான் ஓட்டி வந்த பைக் உடன் பள்ளத்தில் தவறி விழுந்து ள்ளார்.

    இதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரின் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இச்சம்பவம் தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிற்க்கு பொது மக்கள் தகவல் தெரிவி த்துள்ளனர். அவரின் உத்தர வின் பேரில் ஈரோடு எஸ்.பி. ஜவகர், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை யினர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளுக்காக அப்போது அந்த பகுதியில் சாலையில் குறுக்கே குழாய் அமைக்கும் பணி நடைபெற்றதாகவும், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி யில் மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு அந்த வழியே சென்ற வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பவானி சித்தோடு உட்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அம்மாபேட்டை ஹைவே ரோந்து பணி போலீசாராக பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசு ப்பிரமணியம் (52) என்பவர் மீது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்று மோதி விபத்துக்கு ள்ளானது. இதனைத் தொடர்ந்து பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரம ணியம் தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.
    • 30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கொண்டி ராஜபாளையம் பகுதியில் பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு மூடப்படாமல் இருந்த 8 அடி ஆழ பள்ளத்தில் திடீரென பசு மாடு தவறி விழுந்தது.

    மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

    இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் உதவி மாவட்ட அலுவலர் பழ. தியாகராஜ், சிறப்பு நிலைய அலுவலர் ரவி, தீயணைப்பு வீரர் பிரபாகரன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பசுமாடு மீது கயிறை போட்டு கட்டினர்.

    30 நிமிடம் போராட்டத்திற்கு பின்னர் பசுமாட்டை பத்திரமாக வெளியே மீட்டனர். 

    • சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
    • சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டன. 5 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சங்கரன் கோவில் முக்கு, காந்தி கலைமன்றம், சத்திரப்பட்டி ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை நேரத்தில் பெய்த மழையால் கல்லூரி மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர். நேற்று பெய்த ஒரு மணி நேர பலத்த மழையால் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    இங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணிகள் தற்போது வரை முடியவில்லை. இதன் காரணமாக ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. நேற்று பெய்த கனமழையால் இந்தப்பகுதியில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கணபதியாபுரம் ரெயில்வே தரைபாலத்திலும், மலையடிப்பட்டி சாலையிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதனால் அந்த வழியே சென்ற கனரக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றன.

    ராஜபாளையம் நகரில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி திட்டப்பணிகள் என்ற பெயரில் சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

    மழை நேரத்தில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    • ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது.
    • இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இருந்து நூலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை அதிகளவில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    இந்த சாலையின் ஒரு பகுதியில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான குழி ஒன்று உள்ளது. இந்த குழி பல மாதங்களாக மூடப்படாமலேயே உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இது போன்ற குழி அந்த பகுதியில் இருப்பதே தெரியாமல் உள்ளது.

    இதனால் யாரேனும் இந்த குழிக்குள் விழும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×