search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Cemetery"

    • இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் மயானம் அருகே செல்லும் நடுரோட்டில் ஏற்பட்ட சிறிய குழியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் முன்னா ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் உள்ளிருக்கும் அனைத்து கேபிள்களும் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிைலயில் காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • கறம்பக்குடி பேரூராட்சியில் ரூ.1.88 கோடியில் மின் மயானம்
    • பேரூராட்சி தலைவர் பூமிபூஜையுடன் பணிகளை தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவ ட்டம் கறம்பக்குடி பேரூரா ட்சியில் 15 வார்டுகள் உள் ளன. கறம்பக்குடியில் மின் மயானம் அமைக்க வேண் டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று நகர்புற அமைச்சர் ஒப்புதலோடு மின் மயானம் அமைக்க அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கறம்பக்குடி பேரூராட்சியில் ரூபாய் ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி 5-வது வார்டு பகுதியில் தட்டபூரணி செல்லும் சாலையில் ஏற்கனவே உள்ள மயானம் அருகே மின்மயானம் அமைப்பத ற்கான பணியை பூமி பூஜை யுடன் கறம்பக்குடி பேரூரா ட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்தி கேயன், பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கரு ப்பையா, முருகேஸ்வரி, செண்பகவல்லி, வளர்மதி, ஜன்னத் பேகம், பரக்கத் நிஷா, ராஜா, மஞ்சுளா தேவி, பரிதாபகம், ராஜ சேகர், ரங்கசாமி மங்கை யர்கரசி மற்றும் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சக்திவேல் அலுவலர்கள் பணியாளர்கள் அப்துல் லத்தீப், அப்துல் அலீம், சாதிக் பாஷா மற்றும் தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த இடத்தில் கொட்டப்பட்டு வந்தன.
    • மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சியின் பொது பயன்பாட்டிற்காக நகர தி.மு.க செயலாளரான நவநீத பாண்டியன் தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை கடந்த ஆண்டு தானமாக வழங்கினார். இதன் அன்றைய மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும்.

    ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் பேரூராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனிடையே அந்த இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி பூங்காவுடன் கூடிய நவீன மின் மயானம் அமைக்க ரூ. 1 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

    இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரியான்விளை, செல்வ ராஜபுரம், பெருமாள்புரம், கணேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திரண்டு இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இந்தப் போராட்டம் காரணமாக திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலை யில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் அருகே மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
    • சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் அருகே மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் இப்பகுதி பள்ளியில் பயிலும் 3,500 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தாயார்தோப்பு மற்றும் வயல்களில் வேலை பார்க்க செல்பவர்கள். அந்த வழியில் வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சிறு குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் நகராட்சி சேர்மன் பங்களாச்சுரண்டை பகுதியில் மின் மயானம் அமைக்கப்படாது எனவும் சுரண்டை நகராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்காமல் அமைக்கப்படாது என உறுதியளித்தனர். அதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×