search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.


    சுரண்டை அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

    • பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் அருகே மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
    • சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் அருகே மின் மயானம் அமைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் இப்பகுதி பள்ளியில் பயிலும் 3,500 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுடன் தாயார்தோப்பு மற்றும் வயல்களில் வேலை பார்க்க செல்பவர்கள். அந்த வழியில் வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சிறு குழந்தைகள் கலந்து கொண்டு மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் நகராட்சி சேர்மன் பங்களாச்சுரண்டை பகுதியில் மின் மயானம் அமைக்கப்படாது எனவும் சுரண்டை நகராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்காமல் அமைக்கப்படாது என உறுதியளித்தனர். அதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×