என் மலர்
இந்தியா

ஆந்திராவில் பெங்களூரு-ஐதராபாத் சாலையில் 16 மீட்டர் ஆழத்தில் திடீர் பள்ளம்
- வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
- சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கர்னூலின் புறநகர்ப் பகுதியான துபாடு அருகே உள்ளபெங்களூரு ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 6 மீட்டர் அகலம் 16 மீட்டர் ஆழமும் கொண்ட திடீர் பள்ளம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வேகமாக வந்த கார் சாலையின் நடுவில் சாய்வதற்கு பதிலாக ஒரு பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
சில வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டாலும் பெரும்பாலான வாகனங்கள் நேற்று இரவு 8 மணி வரை அங்கேயே சிக்கித் தவித்தன.
இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதனை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
Next Story






