search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனி பஸ்கள் இயக்கப்படுமா? பயணிகள் அவதி
    X

    தனி பஸ்கள் இயக்கப்படுமா? பயணிகள் அவதி

    • பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்கப்படுமா? பழுதான பஸ்களால் தினமும் அவதிபடும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.

    மதுரை

    மதுரையில் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்திலும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தினமும் வேலைக்கு செல்லும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் சென்று வருகின்றனர். தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.

    மதுரையில் ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படு கின்றன. காலை, மாலை நேரங்களில் அதிக அள வில் பயணிகள் கூட்டம் இருக்கும். தற்போது உள்ள பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

    மதுரையில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள் ஓருசில பஸ்கள்தான் நன்றாக உள்ளன. பல பஸ்கள் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இருந்த போதிலும் பயணிகள் அவைகளின் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.

    ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.

    தனியார் பஸ்கள் பயணி களை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்கள் ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிருக்கு தனி பஸ்கள் இயக்கவேண்டும். மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறு கின்றனர்.

    Next Story
    ×