என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flight delay"

    • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்தது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் காத்து கிடந்தனர்.

    விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு உதவிகளை வழங்கின. மேலும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிலையைச் சரிபார்க்குமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தின.

    நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் சர்வர் செயலிழப்பு காரணமாக 20 விமானங்கள் தாமதமாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார்.
    • விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல வேண்டிய விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அதிகாலை 4 மணிக்கு புறப்பட இருந்த விமானம், 6 மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வழங்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், விமான நிறுவன நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட விமானம் 113 பயணிகளுடன் ரன் வேயில் சிறிது தூரம் புறப்பட்டு சென்று தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 2021-ம் ஆண்டில், 8.03 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.83 லட்சமாக இருந்தது.

    விமான தாமதத்தால் இந்த ஆண்டு மே மாதம் வரை 11 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 13 கோடி ரூபாயை வழங்கியுள்ளன என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    2023-ம் ஆண்டில், விமான தாமதங்கள் காரணமாக 22.51 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக விமான நிறுவனங்கள் ரூ.26.53 கோடிக்கு மேல் செலவழித்தனர். இதேபோல் 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.83 லட்சமாக இருந்தது. இது தொடர்பாக விமான நிறுவனங்கள் செலுத்திய தொகை ரூ.15.87 கோடிக்கும் அதிகமாக இருந்தது.

    இந்தத் தகவல்களை மக்களவையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் தெரிவித்தார்.

    2021-ம் ஆண்டில், 8.03 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக விமான நிறுவனங்கள் செலவழித்த தொகை ரூ.3.91 கோடியாக இருந்தது. 2020-ம் ஆண்டில், கோவிட் தொற்று விமானத் துறையைத் தாக்கிய ஆண்டாக பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் விமான தாமதத்தால் மொத்தம் 2.06 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்காக விமான நிறுவனங்கள் செலவழித்த பணம் ரூ. 62.07 லட்சமாகும்.

    திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ), ஒப்புதல் அளித்த அட்டவணையின்படி தங்கள் விமானங்களை இயக்குகின்றன. இருப்பினும், வானிலை, தொழில்நுட்பம், செயல்பாட்டு போன்ற பல்வேறு காரணங்களால் சில நேரங்களில் விமானங்கள் தாமதமாகின்றன," என்று அமைச்சர் கூறினார்.

    • மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
    • டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்சனை மிகவும் தீவிர மடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.

    நேற்றிரவு 7 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 457 ஆக அதிகரித்தது. இந்நிலை யில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 481 ஆக உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    அங்கு ஏற்கனவே கிராப் திட்டத்தின் 1, 2, 3 நிலை கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் 4-வது நிலை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது.

    அங்கு ஏற்கனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவி களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் டெல்லியில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே நேரம் அரசின் உத்தரவுப்படி 10 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும்.

    புதிய கட்டுப்பாடுகளின் படி அனைத்து வகையிலும் அரசு திட்ட கட்டுமான பணிகளுக்கு கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மாநில அரசு, மாநகராட்சி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.


    அடர்ந்த பனி மூட்டம் காரணமாக விமான செயல்பாடுகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் வருகையில் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. பயணிகளுக்கு விமான அட்ட வணையை அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.



    ×