search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குர்லா  எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பால் பயணிகள் அவதி
    X

    குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் படுக்கை வசதி பெட்டிகள் குறைப்பால் பயணிகள் அவதி

    • மத்திய ரெயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுெமன பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
    • கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இடம் கிடைப்பது எப்போதுமே அரிதிலும் அரிதாக உள்ளது.

    திருப்பூர் :

    கோவைக்கும் மும்பைக்குமான வர்த்தக தொடர்புகள் அதிகம். அதனால் தான் கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இடம் கிடைப்பது எப்போதுமே அரிதிலும் அரிதாக உள்ளது. இந்த ரெயில் முன்பு மும்பையின் குர்லாவிலிருந்து பெங்களூரு வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

    கொங்கன்க்ஷக்ஷயில்வே அமைத்த பின் கோவை வழியிலான ரெயில்கள் திருப்பப்பட்டன. அதை ஈடுகட்டும் வகையில் 1998ல் அப்போதைய கோவை எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் முயற்சியால்இந்த ரெயில் கோவை வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த ரெயிலில் முன்பு 11 பெட்டிகள் சாதாரண ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகளாக இருந்தன. இதனால் நடுத்தட்டு மக்கள், வர்த்தகர்கள் பலரும் இந்த ரெயிலில் தொடர்ந்து பயணித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 26ந்தேதியில் இருந்து இந்த ரெயிலில் அனைத்துப் பெட்டிகளும் எல்.எச்.பி., எனப்படும் அதி நவீன வசதிகளுடைய பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதாக இருப்பினும் இதில் சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேலே குறைக்கப்பட்டுள்ளது.

    முன்பு 11 பெட்டிகளில் 720 ஸ்லீப்பர் இருக்கைகள் இருந்தன. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.எச்.பி., பெட்டிகளில் நான்கு பெட்டிகள் மட்டுமே ஸ்லீப்பர் வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெட்டிக்கு 80 இருக்கைகள் என்பதால் 320 ஸ்லீப்பர் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 400 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வகுப்பினரை பாதிப்பதாக உள்ளது.

    இதேபோல வேறு சில ரெயில்களில் எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும், ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. உதாரணமாக தூத்துக்குடி - மைசூரு -மயிலாடுதுறை ரெயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும் ஸ்லீப்பர் பெட்டிகள் அதே எண்ணிக்கையில் தான் உள்ளது. அந்த ரெயில் தென்மேற்கு ரெயில்வேயால் இயக்கப்படுகிறது.

    குர்லா எக்ஸ்பிரஸ், மத்திய ரெயில்வேயால் இயக்கப்படுகிறது. எனவே, தூத்துக்குடி-மைசூரு-மயிலாடுதுறை ரெயிலில் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்தது போல குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    குர்லா எக்ஸ்பிரஸ், தொலைதூர ரெயில் என்பதால் ஏ.சி.,பெட்டிகளை அதிகம் சேர்த்திருப்பதாக ரெயில்வே அதிகாரிகளால் விளக்கம் தரப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை 7ஆக அதிகரிக்க வேண்டுமென்று கோரப்படுகிறது. இதை மத்திய ரெயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுெமன பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×