என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kerala Students"
- மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
- முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் முதல்வராக ரெமா செயல்பட்டு வந்தார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குடிநீர் மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர். இதனால் கல்லூரி முதல்வர், மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தகவல் கேரள உயர் கல்வி துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது. கேரள உயர் கல்வி துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ரெமாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இருசக்கர வாகனத்தை ஓட்டிய மாணவனின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.
- இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று பெற்றோர்களின் முன்னிலையில் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இடுக்கி:
கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர், ஒரே ஸ்கூட்டியில் பயணித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்த 5 மாணவர்களுக்கும் மோட்டார் வாகன துறையினர் அபராதம் விதித்தனர்.
அத்துடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிய மாணவனின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது. மாணவர்கள் 5 பேரும் இடுக்கி மருத்துவக் கர்லலூரியில் சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் ரமணன் கூறியதாவது:-
மாணவர்கள் 5 பேரும் இடுக்கி மருத்துவக்கல்லூரியில் 2 நாட்கள் சமூகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தகுதியான பிரிவில் அவர்களின் சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினேன்.
இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன்பாக, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்களின் முன்னிலையில் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினேன். விதிகளை மீறி வேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கி கூறினேன். அப்போது அந்த மாணவர்கள் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று பெற்றோர்களின் முன்னிலையில் உறுதியளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்