search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puducherry rain"

    • பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது.
    • ஏற்கனவே மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடந்து மிதமான மழை பெய்து வருகிறது. பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #heavyrain #schoolholiday
    புதுச்சேரி:

    வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  #heavyrain #schoolholiday
    புதுவையில் மழை பெய்து வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    கஜா புயலையொட்டி புதுவையில் கடந்த 15-ந்தேதி முதல் மழை கொட்டியது. புயல் கரையை கடந்த 15-ந்தேதி இரவு முதல் 16-ந்தேதி காலை வரை 6.5 செ.மீ. மழை பதிவானது.

    இந்நிலையில் மீண்டும் வங்கக்கடலில் தென் கிழக்கில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு பகுதிக்கு நகர்ந்துள்ளது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் என்பதால் புதுவை, காரைக்காலில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

    இதன்படி புதுவையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் மழை கொட்டி தீர்த்தது. நேற்று இரவும் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    இன்று காலை முதல் வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலுடன் மழை பெய்து வருகிறது. இன்று மாலை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுவையில் இன்று பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவையில் வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெரியளவில் மழை பெய்யவில்லை. அதற்கு பதிலாக கோடை காலம் போல தகிக்கும் வெப்பம் நிலவியது. இதனால் அக்டோபர் மாதத்தில் பெரிதாக மழை பெய்யும் என மக்கள் நம்பி இருந்தனர்.

    இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் 2 நாட்கள் கடுமையான மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு அரசு விடுமுறையும் அறிவித்தது.

    இந்த மழை தொடரும் என அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தது. ஒத்திகையும் நடத்தி னர். ஆனால், மழை பெய்ய வில்லை. அதே நேரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. மழை பெய்வதற்கான சூழலும் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் புதுவையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    இன்று காலை 10 மணிக்கு மேல் புதுவையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

    தீபாவளி பண்டிகைக்கு 2 வாரம் மட்டுமே உள்ள நிலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியுள்ளது வியாபாரிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மழையினால் மக்கள் வெளிவர மாட்டார்கள். வார இறுதிநாட்களில்தான் மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் வருவார்கள். ஆனால், இன்று மழையின் காரணமாக மக்கள் நடமாட்டம் புதுவையில் குறைந்தது.

    இதேநிலை நீடித்தால் தீபாவளி வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கும் என வியாபாரிகள் கலக்க மடைந்துள்ளனர்.

    புதுவையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 3-ந்தேதி இரவு தொடங்கி 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

    பகல், இரவு என மழை தொடர்ந்த வண்ணம் உள்ளது. லேசான மழையை தொடர்ந்து அவ்வப்போது கனமழையும் பெய்த வண்ணம் உள்ளது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கி உள்ளது. நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய கிராமப்புற பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் 1,500 ஏக்கர் நெல் பயிர் மூழ்கி உள்ளது.

    மழை நீரை வெளியேற்ற விவசாயிகள் வரப்புகளை வெட்டி திறந்து விட்டுள்ளனர். இருப்பினும் தொடரும் மழையால் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. மழை நின்றால் மட்டுமே பயிர்கள் நீரில் மூழ்கி அழுகுவதை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து அரசு துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பேடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தனித்தனியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.

    அதோடு இன்றைய தினம் (சனிக்கிழமை) புதுவையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 21-ந் தேதி மொகரம் பண்டிகைக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விடுமுறைக்கு மாற்றாக இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    இதனால் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இன்று அதிகாலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது கனமழையும் மற்ற நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

    இதற்கிடையே வானிலை மையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்திருப்பதால் அரசு துறை ஊழியர்கள் அனைவரும் நாளை பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மோசமான வானிலை காரணமாக புதுவையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் பெங்களூரு, ஐதராபாத் விமானங்கள் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. #Rain #IMD
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை நேரத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. நேற்று இரவு ஒன்றிரண்டு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இன்று காலை கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. அதேவேளையில் சில இடங்களில் வானம் மேக மூட்டமும் காணப்பட்டது.

    இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மழை செய்ய வாய்ப்பு உள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிமை மையம் தெரிவித்துள்ள செய்தியில், ‘‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை பெய்யலாம்’’ என்று தெரிவித்துள்ளது.
    ×