என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியை 3 புயல்கள் தாக்கும் அபாயம்- வானிலையாளர் தகவல்
    X

    புதுச்சேரியை 3 புயல்கள் தாக்கும் அபாயம்- வானிலையாளர் தகவல்

    • இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக இருக்கும்.
    • தென்மேற்கு பருவமழை சீசனில் கூட இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆண்டு தோறும் சராசரியாக 1, 330 மி.மீ. மழை பதிவாகும்.

    தென்மேற்கு பருவமழை காலத்தைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பதிவு அதிகமாக இருக்கும். நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. மொத்தமாக 575.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கூடுதலாக 173.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த காலத்திலும் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார்.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக இருக்கும். தென்மேற்கு பருவமழை சீசனில் கூட இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும். 2 முதல் 3 புயல்கள் தாக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×