search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoner suicide"

    • பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் மதுரை சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    மதுரை:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் கே.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 28). இவர் மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கு கஞ்சா பழக்கமும் இருந்து வந்துள்ளது.

    கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இவரும், இவரது தந்தையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் அவரது தந்தைக்கு ஜாமின் கிடைத்து வெளியே சென்றார். ஆனால் அஜித்குமாருக்கு ஜாமின் கிடைக்காததால் தொடர்ந்து அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கஞ்சா பழக்கத்தற்கு அடிமையாகி இருந்ததால் அவர் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கின் வாய்தாவிற்காக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மாலை மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். இதற்கிடையே சில மாதங்களாக தனக்கு தானே பேசிக்கொள்வதுமாகவும் இருந்துள்ளார்.

    இதனால் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இதற்காக மனநோயாளிகள் சிகிச்சை பெறுபவர்களுக்கான தனி சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வழக்கம் போல் உணவு அருந்தி விட்டு வந்தவர் திடீரென மின்விசிறியில் துண்டை மாட்டி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட சிறைக்காவலர்களும், சக கைதிகளும் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ரெயில்வே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் மதுரை சிறையில் கைதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார்.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட நாகராஜை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    செங்குன்றம்:

    கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (32). பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்து இருந்தனர். அவர் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    ஜெயிலில் இருந்த போது நாகராஜிக்கு உடலில் சொறி, சிரங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பாளை மத்திய சிறை வளாகத்தில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று நீதிபதி விசாரணை நடத்தினார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 27), கூலித் தொழிலாளி. இவருக்கும், சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடுக்கல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆனந்தி, தனது குழந்தையுடன் சீதபற்பநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இசக்கிமுத்து சீதபற்பநல்லூருக்கு சென்று குழந்தையை பார்த்தார். அப்போது, குழந்தையுடன் உடனடியாக வீட்டிற்கு வரும்படி ஆனந்தியிடம் இசக்கிமுத்து கூறினார். இதற்கு மாமியார் முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி இரவில் சீதபற்பநல்லூருக்கு இசக்கிமுத்து மீண்டும் சென்றார். இரவில் அங்கு தங்கினார். மறுநாள் காலையில் தூங்கி எழுந்த ஆனந்தி, தனது அருகில் படுத்து இருந்த குழந்தையையும், கணவர் இசக்கி முத்துவையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அய்யனார்குளத்தில் இருந்த இசக்கிமுத்துவை பிடித்து சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது குழந்தையை குளத்தில் கல்லை கட்டி வீசிக் கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் சிறை அறையில் இருந்து கைதிகள் திறந்து விடப்பட்டனர். அறையில் இருந்து வெளியே வந்த இசக்கிமுத்து, சிறை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தனது டவலை கிழித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மரத்தில் இசக்கிமுத்து பிணமாக தொங்கியதை பார்த்த மற்ற கைதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், ஜெயிலர் தர்மலிங்கம் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    இதுகுறித்து ஜெயிலர் தர்மலிங்கம் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து இசக்கிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இசக்கிமுத்து கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    யாருடனும் பேசாமல் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனால் அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று நெல்லை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இதில் இசக்கிமுத்து தற்கொலை குறித்து யாரும் சந்தேகம் எழுப்பவில்லை. இதனால் இன்று அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
    பாளை மத்திய சிறை வளாகத்தில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 27). கூலித் தொழிலாளியான இவருக்கும், சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும் (21) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    ஆனந்திக்கு சில நாட்களுக்கு முன்பு நடுக்கல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, கடந்த வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் ஆனந்தி சீதபற்பநல்லூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து குழந்தையை பார்க்க சென்ற இசக்கிமுத்து, குழந்தையுடன் ஆனந்தியை அய்யனார்குளம் வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இசக்கிமுத்து குடிபோதையில் இருந்ததால், மாமியார் முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இசக்கிமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கிமுத்து சீதபற்பநல்லூரில் உள்ள மனைவி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். அதிகாலையில் ஆனந்தி எழுந்து பார்த்தபோது, தொட்டிலில் இருந்த குழந்தையையும், இசக்கிமுத்துவையும் காணவில்லை.

    இது குறித்து ஆனந்தி புகாரின்பேரில் சீதபற்பநல்லூர் போலீசார் இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் குழந்தையை இசக்கிமுத்து இரவில் தூக்கிச் சென்று சீதபற்பநல்லூரில் உள்ள குளத்தில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை வீசிய இடத்தை இசக்கிமுத்து அடையாளம் காட்டவே, அங்கு தண்ணீருக்குள் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இசக்கிமுத்துவை சிறையில் அடைத்த நாள் முதல் அவர் மனநிலை சரி இல்லாதவர் போல் சிறை வளாகத்தில் சுற்றி வந்துள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் இன்று காலை சிறை வளாகத்தில் இசக்கிமுத்து நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் கையில் வைத்திருந்த டவலால் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற சிறைத்துறையினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை வளாகத்தில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை சிறையில் கைது ஒருவருர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாகவும் சிறையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் கைதி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து இன்று புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கைதிகள் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைதிகள் யாரேனும் போதை பொருட்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துகிறார்களா? எனவும் அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது. #tamilnews
    ×