search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoner dead"

    • சீனிவாசனுக்கு கடந்த 15-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • பாதிக்கப்பட்ட அவரை சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள தொட்டியம் புதூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). ஜோதிடரான இவர், நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த கொலை வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சீனிவாசனுக்கு கடந்த 15-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அவரை சேலம் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெற்ற வந்த நிலையில், நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி இறந்துள்ளதால் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • நெஞ்சு வலி காரணமாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சென்னை கைதி உயிரிழந்தார்.
    • பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). திருவண்ணாமலையில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு சரவணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

    அவரை உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரவணன் அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல் கைதி இன்று காலை உயிரிழந்தார்.
    ராயபுரம்:

    கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம் (60). இவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் தண்டனை கைதியாக அடைத்தனர்.

    இந்த நிலையில் இப்ராகிமுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கடந்த 2 மாதமாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி இப்ராகிம் பரிதாபமாக இறந்தார்.
    ×