search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayakumar MLA"

    • திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
    • மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு ஏடி காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இங்கு ஏராளனோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏ.டி. காலனியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எதற்காக திடீரென வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

    இந்நிகழ்வில் ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி, ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி அன்பழகன், ராசப்பன் நிர்வாகிகள் காளிமுத்து, யுவராஜ், ராமசாமி, ராம்குமார், சையது, சாமிநாதன், நல்லசாமி, மூர்த்தி, கொண்டான் உள்ளிட்டோரும் பொதுமக்களும் இருந்தனர்.

    • விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் முயற்சியின் மூலம் புதிய ரேசன் கடை திறக்கப்பட்டது.
    • 3 மாதங்களுக்குள் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 33 வது வார்டு பாரப்பா ளையத்தில் புதிய நியாய விலை கடை வேண்டும் என திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் விஜயகு மாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் முயற்சியின் மூலம் புதிய ரேசன் இன்று கடை திறக்கப்பட்டது.

    இன்று நடந்த திறப்பு விழாவில் விஜயகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதும க்களுக்கு பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக 3 மாதங்களுக்குள் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    நிகழ்ச்சியில் கோல்டன் நகர் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன், கவுன்சிலர் தமிழ்ச்செல்வி முத்துக்கிருஷ்ணன், செட்டி பாளையம் சொசைட்டி தலைவர் ராமசாமி, துணை த்தலைவர் சுப்பிரமணியம், வட்ட செயலாளர் மாணி க்கம், நிர்வாகி விஸ்வநாதன் ,துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்றம் சார்பாக நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
    • மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி பெருமா நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றம் சார்பாக நால்ரோடு பஸ் நிறுத்தம் அருகில் ரூ.9.25 லட்சம் மதிப்பில் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு ள்ளது. அதனை இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டி ற்கு அர்ப்ப ணித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்குமார், எம்.சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தாமணி வேலுச்சாமி, பெருமா நல்லூர் கூட்டுறவு கடன் சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், கணக்க ம்பாளையம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் மேக்னம் பழனி சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, பாசறை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் சேர்மன் தங்கராஜ், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராக்கியண்ணன், பெருமா நல்லூர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அய்யாசாமி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
    • வீதிகளுக்கு ரூ.25 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.

    திருப்பூர் :

    உலக மகளிர் தினத்தையொட்டி திருப்பூர் ஒன்றியம் வள்ளிபுரம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவி குழு மகளிர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ.பரிசுகள் வழங்கினார். இதில் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் அனைவருக்கும் மா, நெல்லி, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக பசுமை நகரில் உள்ள வீதிகளுக்கு ரூ.25 லட்சத்தில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் கண்ணம்மாள் ராமசாமி, சாமிநாதன், பேரவை ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

    ×