search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் பாரப்பாளையத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு - விஜயகுமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தா்
    X

    விஜயகுமார் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்த காட்சி.

    திருப்பூர் பாரப்பாளையத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு - விஜயகுமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தா்

    • விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் முயற்சியின் மூலம் புதிய ரேசன் கடை திறக்கப்பட்டது.
    • 3 மாதங்களுக்குள் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 33 வது வார்டு பாரப்பா ளையத்தில் புதிய நியாய விலை கடை வேண்டும் என திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் விஜயகு மாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் முயற்சியின் மூலம் புதிய ரேசன் இன்று கடை திறக்கப்பட்டது.

    இன்று நடந்த திறப்பு விழாவில் விஜயகுமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதும க்களுக்கு பொருட்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உடனடியாக 3 மாதங்களுக்குள் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    நிகழ்ச்சியில் கோல்டன் நகர் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன், கவுன்சிலர் தமிழ்ச்செல்வி முத்துக்கிருஷ்ணன், செட்டி பாளையம் சொசைட்டி தலைவர் ராமசாமி, துணை த்தலைவர் சுப்பிரமணியம், வட்ட செயலாளர் மாணி க்கம், நிர்வாகி விஸ்வநாதன் ,துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×