என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மகளிர் உலக கோப்பை வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
    X

    மகளிர் உலக கோப்பை வெற்றி.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    • வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்றிக்கு காரணம்

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது பெண்கள் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று, இந்தியா கிரிக்கெட் உலகை ஆழ்கிறது. இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்றிக்கு காரணம்

    இந்திய அணியின் இந்த அபாரமான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது திறமை, மன உறுதியின் அற்புதமான வெளிப்பாடு.

    இந்த வெற்றி, தலைமுறை தலைமுறையாகப் பல இளம் வீராங்கனைகள் பெரிய கனவுகளைக் காணவும், துணிச்சலுடன் விளையாடவும் ஊக்கமளிக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ், பாஜக தலைவர்கள் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை ஆகியோரும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×