என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியோருக்கு தொழில் தொடங்க கடனுதவி
    X

    வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியோருக்கு தொழில் தொடங்க கடனுதவி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை'' செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொேரானா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி ெபற்றுப் பயன் பெறலாம். அவர்கள் ெகாரோனா பரவலால் 1.1.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    விற்பனை மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் பயனாளர் தம் பங்காக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10 சதவீதம் மற்றும் பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5சதவீதம் செலுத்த வேண்டும்.

    மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு திட்டத் தொகையில் 25சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும்.

    மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www/msme.Online.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரி யில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை 2 பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில்மையம், சிவகங்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க (MEGP) என்ற இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இது குறித்து மேலான விவரங்கள் மற்றும் ஆலோச னைகள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திள் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி மூலமாகவோ அணுகி பயன்பெறலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×