search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance Redressal Centre"

    • குறை தீர்க்கும் மையத்தில் புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் அணுகி குறைகளை தெரிவிக்கலாம். (தொலைபேசி எண்: 044-25340518).

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2021-22-ம் ஆண்டின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கைத்தறி ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதைத்தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலை வாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்களின் குறைகளை தெரிவிக்க எதுவாகவும் கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் தங்களது குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    துணை இயக்குநர் (அமலாக்கம்), குறை தீர்க்கும் அலுவலர், நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை -104 என முகவரியிட்டு கடிதம் மூலமாக நெசவாளர்கள் புகார்களை தெரிவிக்கலாம். நெசவாளர் குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் அணுகி குறைகளை தெரிவிக்கலாம். (தொலைபேசி எண்: 044-25340518).

    நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் இணைதளம் முகவரி:https://gdp.tn.gov.in/dhi நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் மின்னஞ்சல் wgrcchennai@gmail.com மேற்கண்ட வழிகள் மூலமும் நெசவாளர்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×