என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில்  மின்கழிவுகளை எரித்தால்  5 ஆண்டு சிறைதண்டனை: கலெக்டர் தகவல்
    X

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்கழிவுகளை எரித்தால் 5 ஆண்டு சிறைதண்டனை: கலெக்டர் தகவல்

    • மின் கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.
    • மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    இந்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், மின் விதிகள் மற்றும் மேலாண்மைக் கழிவு விதிகளின்கீழ், அங்கீகரி க்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுபு துப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும். மேலும், நடுவண்மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள், மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீக ரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மின்னனு கழிவு விதிகளின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்-கழிவுப் பொருட்களைச் சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் -கழிவுகளைபி ரித்தெடுப்போர் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

    முறைசாரா வர்த்தகம் அறிவியல்பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின் கழிவுகளை எரித்தல் பேன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது மக்களின் குறைகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனவே, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்கழிவுகளைஅறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனிதஆரோக்கியத்திற்கும், சுற்று ச்சூழலுக்கும் எதிர்ம றையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே, மின்னனு கழிவு மேலாண்மை விதிகளின்படி, மின் பொருள் உற்பத்தியாளர்கள்,தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செ ய்வோர், பிரித்தெடுப்போர்மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோர் மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ்தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்க ப்படும். மேலும், அந்நிறு வனத்தைமூடிவிடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைஅல்லது ரூ.1 இலட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட பொது மக்கள் சட்டவி ரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு மின் கழிவுகளை அங்கீகரி க்கப்பட்ட பிரித்தெ டுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும். மேலும்,பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின் கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்கத்தைத் தவிர்த்து மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்று செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×