search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலமுறை ஊதியம் வழங்கக்கோரி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு
    X

    மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    காலமுறை ஊதியம் வழங்கக்கோரி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு

    • 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்–படையில் பணியாற்றி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
    • பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஏற்று உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். மாநில பொருளாளர்சதீஷ் வரவு, செலவு வாசித்தார்.

    அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் குமார், பொதுச் செயலாளர் பொன்னி வளவன், தஞ்சை மாவட்ட செயலாளர்பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில், 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்–படையில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவ–மனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை ஏப்ரல் மாதத்தில் நடத்திட வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட அரசின் காலி பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஏற்று சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.

    இதில் மாநில நிர்வாகிகள் தினேஷ்குமார், முருகன், கார்த்தி, ராஜசேகர், இளைய–ராஜா, தமிழ்செல்வன், மணி, கோபி, அருண்குமார், மணமங்கலம், நாகலட்சுமி, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் வரவேற்று பேசினார். முடிவேல் மாநில துணை செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    Next Story
    ×